குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதற்காக ரேஷன் கார்டுகளில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒரு வாக்குறுதி குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் ஆகும். மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் இந்த திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு பொருளாதார நிலை காரணமாக திட்டம் தொடங்கப்படவில்லை […]

முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்” தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியதாவது; தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சருடன் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதியக் கண்டுபிடிப்புகளைத் தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் முதலமைச்சரின் “ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம்” தொடங்கப்பட்டது. இதற்காக மாநில […]

அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை இந்தியாவில் வைத்துள்ளது. இந்தநிலையில், சமீபத்தில் 5ஜி சேவையும் ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்தியது. இந்த நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் […]

உலக நாடுகள் பட்டியலில் இண்டர்நெட் முடக்கத்தில் தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே இணைய தடங்கல்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்த பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 187 உலகளாவிய இணைய முடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் அதில் 84 முறை இணைய முடக்கம் இந்தியாவில் தான் […]

உலகில் மிக அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அட்லாண்டிஸ் தி ராயல் என்ற பிரம்மாண்ட ரிசார்ட்டில் உள்ள சுவாரஸ்யங்களை பார்க்கலாம். துபாயை தளமாகக் கொண்ட ஹோட்டல் நிறுவனமான கெர்ஸ்னர் இன்டர்நேஷனல் லிமிடெட், கடந்த ஜனவரி மாதம் அட்லாண்டிஸ் தி ராயல் என்ற சொகுசு ரிசார்ட் அறைகள் கொண்ட ஹோட்டல் திறந்தது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அதிகபட்சமாக ஒரு இரவுக்கு 1000000 டாலர் அதாவது 85 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக பெறப்படும் […]

வேகமாக பரவி வரும் ஷிகெல்லா என்ற பாக்டீரியாவுக்கு அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் அந்த நாட்டில் ஏராளமான மக்களை பாதித்து உயிர்களை பறித்ததுடன், இந்தியா உட்பட மற்ற உலக நாடுகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது. வைரஸ் தாக்கத்தின் பிடியில் இருந்து உலகம் முழுவதிலும் […]

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா நம்முடன் தான் இருக்கும், தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும் காய்ச்சல் […]

நாளொன்றுக்கு மனிதன் 3 வேலை உணவு அருந்துவான். இதில் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் பெரும்பாலான மக்கள் இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளையே சாப்பிடுகின்றனர். மதியம் மட்டும் வெள்ளை சாதத்தை சாப்பிடுவார்கள். ஆனால், சிலருக்கு 3 வேலையும் வெள்ளை சாதம் இருந்தால் தான் சாப்பிடுவார்கள். அப்படி அதிகமாக வெள்ளை சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு உடல்நலத்தில் எந்த தீங்கு […]

இலங்கையில் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓய்வூதியம் பெறுவோர், நாட்டுக்கு சுமையாக இல்லாமல் தனது ஓய்வு காலத்தை கழிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இந்த நிதியின் நோக்கமாகும். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், எதிர்காலத்தில் அரசு சேவையில் இணைத்துக் […]

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Aircraft Technician (Maintenance & Overhaul Shops) Aircraft and Engines (B-1), Avionics (Electrical/ Instrumental/ Radio) (B-2), Technician (Skilled) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். காலிப்பணியிடங்கள்: 371 வயது வரம்பு: […]