ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட விவரங்களை அறிய அரசின் ‘சம்பல்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய சமூக உதவித் திட்டம் என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. ‘சம்பல்’ (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் […]

தற்போதைய காலக்கட்டத்தில் கைரேகை பயன்பாடு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றில் அதிகமாக கைரேகை பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் கைரேகையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? ஒருவர் இறந்த பிறகு அவரது கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்ய முடியுமா என்று?. ஒரு நபர் இறந்த பிறகு, அவரது உடல் இறுக்கமாகிறது மட்டுமல்லாமல் விரல்கள் இறுக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், […]

அம்பானி குடும்பம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். இவர்களின் அண்டிலியா வீடுதான் இந்தியாவிலேயே அதிக செலவில் கட்டப்பட்ட நிகழ்கால வீடு ஆகும். அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014இல் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் இந்த வீடுதான் முதலிடம் பிடித்தது. இதை கட்ட மட்டும் 60 மில்லியன் டாலர் செலவு ஆனது. இப்படிப்பட்ட நிலையில்தான் முகேஷ் அம்பானி கார் ஓட்டுநரின் வருமானம் தற்போது இணையம் முழுக்க […]

தமிழ்நாட்டில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இம்மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மார்ச் 3ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராமன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், “மேல்நிலை 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள […]

ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும். 18 […]

உங்கள் அக்கவுண்ட்டில் இவ்வளவு பணம் கிரெடிட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். இது நம்மில் பெரும்பாலானோருக்கு அடிக்கடி வரக்கூடிய மெசேஜ்களில் ஒன்று. இப்படி மெசேஜ் வந்தால் அதை க்ளிக் செய்யக்கூடாது என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் நமது ஜாதகங்களில் கெடுபலன் உச்சத்தில் இருந்தால் அந்த எச்சரிக்கை எல்லாம் ஞாபகத்தில் வராது போலும். இப்படி ஒரு சம்பவத்தில் சிக்கியிருக்கிறார் பிரபல நடிகரின் சகோதரர். […]

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்களானது பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் […]

சென்னையில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை – திருப்பரங்குன்றம் -திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழி பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இன்று (மார்ச் 1) முதல் பல்வேறு தேதிகளில் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் […]

2023-ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளமாக தமிழ்நாட்டின் லெமூர் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை இந்தியா டுடே நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள லெமூர் கடற்கரை என அழைக்கப்படும் காண்டிபுரம் கடற்கரை அதன் அழகிய இருப்பிடம் மற்றும் இயற்கைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்றதாக உள்ளது. எனவே இந்த […]

உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும் இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் அழைப்பு விடுத்துள்ளார். கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஜெர்மனி திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் இந்தியா உள்பட உலகில் உள்ள வேலையில்லாத நிபுணர்கள் ஜெர்மனிக்கு வரலாம் என்றும் இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாள் […]