ஜார்கண்ட் மாநிலத்தில் பரவும் கோழி காய்ச்சலால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அங்குள்ள போகாரோ மாவட்டத்தின், லோஹஞ்சலில் அமைந்துள்ள அரசாங்க கோழி பண்ணையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. கோழிகளின் இறப்பு தொடர்பாக மாவட்ட கால்நடை வளர்ப்புத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதற்கிடையே, கோழி இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அம்மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது இறந்த கோழிகளின் மாதிரிகளை எடுத்து கொல்கத்தா […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
பெட்ரோல் டேங்க்கில் அதிகபட்ச வரம்பிற்கு பெட்ரோல் நிரப்புவதால் ஏற்படும் ஆபத்துகளையும், அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம். அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களை பலர் முறையாகப் பராமரிக்காமல் இருந்து வருவதால், அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. சாலைகளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி எரிவது போன்ற சம்பவங்கள் அண்மையில் நடைபெற்றதை செய்திகள் மூலம் அறிய முடிந்தது. இதற்கு பல்வேறு காரணங்களை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாகனங்களில் […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. ரயிலில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறார்கள். இந்நிலையில், ஐஆர்டிசி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தற்போது புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பாக பயணிகள் ஐஆர்சிடிசி கணக்கை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மொபைல் எண் மற்றும் இ-மெயில் ஐடி […]
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிப்ரவரி மாதம் ரேஷன் கடைகளில் இரு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 8-ம் தேதி ஹோலிப்பண்டிகை வர இருப்பதால் அதற்கு முன்னதாக இலவச […]
நாம் முக்கியமான வேலைகளில் இருக்கும் போது ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வரும். நாமும் ஏதோ முக்கியமான ஃபோன் கால் என நினைத்து எடுத்து பேசுவோம். ஆனால், அது ஸ்பேம் கால் அல்லது கஸ்டமர் கேர் கால் அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடும் எண்களில் இருந்து வரும் போன் அழைப்புகளாக இருக்கும். இதனை எப்படி கட்டுப்படுத்துவது, இப்படியான அழைப்புகள் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை குறித்து விரிவாக […]
பொதுவாக உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். சாப்பிட்டு முடித்த பிறகு பில் கட்டும்போது ஜிஎஸ்டி வரியும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், பில் கட்டும் அவசரத்தில் அதையெல்லாம் பார்க்காமல் கட்டணத்தை மட்டும் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவோம். கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஹோட்டல்களில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பது இயல்பான ஒன்றுதான் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அனைத்து உணவுகங்களும் ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டியது கிடையாது. […]
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வு எழுத தகுதியானவர்கள் https://sss.nic.in என்ற இணையதளம் மூலமாக நாளைக்குள் (பிப்ரவரி 24 ஆம் தேதி) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி வழி தேர்வாக […]
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு எழுதியவர்களின் உத்தேச விடை குறிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் கணினி வழியில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தற்காலிக விடை குறிப்புக்கு இணையதளத்தில் ஆட்சேபனை தெரிவிக்கும் […]
இந்தியாவின் முதல் டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்து மும்பை சாலைகளில் இயக்கப்பட்டது. இதில் அடங்கியுள்ள வசதிகள் மற்றும் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் மற்றும் நேஷனல் சென்டர் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்பட்டுள்ளது. சிஎஸ்எம்டியில் இருந்து புறப்படும் முதல் பேருந்து காலை 8.45 மணிக்கும் கடைசி பேருந்துகள் மாலை 4 மணிக்கும் […]
கிரிப்டோ என்பது ஒரு ஆபத்தான முதலீடு என்றும் கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் இளைஞர்கள் அதிகளவில் கிரிப்டோவில் முதலீடு செய்துவருகின்றனர். ஆனால் சமீபத்தில் கிரிப்டோவின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்ததை அடுத்து கிரிப்டோவில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு சிலர் நல்ல […]