நாடு முழுவதும் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். இதற்கிடையே, பான் கார்டில் சிலர் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய நேரிடலாம்.. முகவரி உட்பட சில அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதார் கார்டில் மாற்றங்களை […]

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், கூடுதல் மின்நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு மின்வாரியம் நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைவரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்பார்கள்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார பயன்பாடு ஒதுக்கீடு கணக்கு உண்டு. அந்த அளவை தாண்டும் பொழுது.. உங்களது இணைப்பின் […]

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செய்திகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 1986ஆம் ஆண்டில் இருந்த நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு மாத ஓய்வூதியம் […]

தமிழக அரசால்‌ நரிக்குறவர்‌, குருவிக்கான்‌ சமுதாயத்தினர்‌ அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும்‌ நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பழங்குடியினர்‌ மக்களுக்கு சாதிச்சான்றிதழ்‌ வழங்க அதிகாரம்‌ வழங்கப்பட்டுள்ள வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ / சார்‌ ஆட்சியர்கள்‌, நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்று வழங்குவதற்கு எதுவாகவழிகாட்டி நெறிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌ தற்போது மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பிரிவில்‌ இருந்து பழங்குடியினர்‌ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளநரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்றிதழை அரசால்‌ […]

அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைக்கும் ஒரே பழம் வாழைப்பழம். நாவின் சுவை நரம்புகளையும் இவை திருப்திப்படுத்தும். நன்கு கனிந்த வாழைப்பழங்கள் தித்திப்பான சுவையில் இருக்கும். இதை சாப்பிடுவதால் உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது. பல நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை உடலுக்குத் தருகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் வாழைப்பழம் உண்பதால் அந்த பிரச்சனை அப்படியே குணமாகும். செரிமான அமைப்பு, சிறுநீரகம், […]

இந்தியாவில் 101 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 11.14% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சி இதழான “தி லான்செட்” நடத்திய ஆய்வில், 136 மில்லியன் மக்கள், அதாவது மொத்த மக்கள் தொகையில் 15.3% பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் இந்த நிலை பொதுவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணக்கெடுப்பின்படி, இன்சுலின் என்ற […]

மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக பூமியானது 1993 இருந்து 2010 ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 80 சென்டி மீட்டர் கிழக்கே சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 1993 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மட்டும் 2,150 ஜிகா தொன் நிலத்தடி நீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டு உள்ளது. இது 6 மில்லிமீட்டக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் எனத் […]

மனிதனை போன்ற உணர்வுகள் கொண்ட ரோபோவை அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நமது உலகில் விஞ்ஞானமானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதில் ஒரு படியாக விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அது என்னவென்றால் வியர்வை, நடுக்கம் மற்றும் மூச்சு விடுதல் போன்ற உணர்வுகள் அடங்கிய ஒரு புதுவித ரோபோவை உருவாக்கி உள்ளனர். இந்த ரோபோ ஆன்ட்டி (ANDI) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதுமையான ரோபோவை […]

தமிழ்நாட்டில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில், மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. […]

இன்று தமிழகத்தின் பல துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.அதுகுறித்த முக்கிய விபரங்கள் பின்வருமாறு, நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது எரிசக்தி துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் பிரதீப் சிங் வணிக வரித்துறை […]