ஐரோப்பாவில் கடந்த ஜூன் மாதம் நிலவிய வரலாறு காணாத தீவிர வெப்ப அலை காரணமாக, வழக்கமான அளவை விடக் கூடுதலாக சுமார் 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய இறப்பு கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைக் கடந்தபோது, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளில்தான் இறப்புகள் கணிசமாக அதிகரித்தன. இப்பகுதி மக்கள் இதுபோன்ற கடுமையான வெப்பத்திற்குப் பழக்கப்படாதவர்கள் என்பதும், அங்கு குளிர்சாதன […]

உணவு உற்பத்தி, சுற்றுலாப் பாதுகாப்பு, இயற்கை எழில் மற்றும் சர்வதேச பயண வலிமை எனப் பல்வேறு துறைகளில் உலக அளவில் தனித்துவமான சாதனைகளை படைத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நாடுகளின் முக்கிய பட்டியல்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்க நாடான கயானா, ‘நேச்சர் புட்ஸ்’ அமைப்பின் சர்வதேச ஆய்வில் உலகின் 186 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உணவுத் தன்னிறைவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்நாடு தனது குடிமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்துத் […]

இன்று வறண்டு கிடக்கும் உலகின் மிகப்பெரிய சகாரா பாலைவன பகுதியில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவின் 5 பெரும் ஏரிகளை விட பிரம்மாண்டமான நன்னீர் ஏரி ஒன்று பரந்து விரிந்திருந்ததாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 3.61 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் கம்பீரமாகக் காட்சியளித்த அந்தப் பிரம்மாண்ட ‘மெகா-சாட்’ (Mega-Chad) ஏரி, காலப்போக்கில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களால் சுருங்கி, தற்போது ஆப்பிரிக்காவின் சாட், நைஜர், நைஜீரியா […]

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்தில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 5.58 […]

செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு பாறை அமைப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய கதவு போன்ற தோற்றத்தில் இருப்பதால், சிலர் அதை வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதத் தொடங்கினர். இந்த புகைப்படம் செவ்வாயை ஆய்வு செய்து வரும் ரோவர் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் காலே பள்ளத்தில் உள்ள மவுண்ட் ஷார்ப் பகுதியில் இருக்கும் பாறைகள் மற்றும் மண் […]

எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் மறுத்துள்ளது. அந்தப் பகுதி ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்நாட்டின் உயர் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் பசீஜ் படைப்பிரிவுத் தலைவர் ஹுசைன் தாயேப் பேசுகையில், “இன்று ஹார்முஸ் ஜலசந்தி இஸ்லாமிய குடியரசான ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. […]

தாய்லாந்தில் இருந்து கடந்த 4ம் தேதி டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 8 பணிப்பெண்கள் உட்பட, 145 பேர் பயணித்தனர். விமானம் நடு வானில் பறந்த போது, திடீரென பயங்கரமாக குலுங்கியது. அது பறந்து கொண்டிருந்த உயரத்தில் இருந்து திடீரென பல அடி தாழ்வாக பறந்ததால், பயணிகள் பீதி அடைந்தனர். பணிப் பெண்கள் சிலர், விமானத்திற்குள் இருந்த பயணிகள் மீது தடுமாறி விழுந்ததில், 17 பேர் […]

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வடகொரியா குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாகப் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தென்கொரியக் கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வோன்சான் நகரிலிருந்து காலை 6 மணியளவில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. சுமார் 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்து […]

உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் தடையை “இரும்புச் சுவர்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதற்கு எதிராக ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். ஈரானின் ராணுவ […]

சீனாவை உலகளவில் முன்னணி பொருளாதார வல்லரசாக கட்டியெழுப்பிய முன்னாள் பிரதமரும், “பொருளாதாரத்தின் இரும்பு மனிதர்” என்று போற்றப்பட்டவருமான ஜூ ரோங்ஜி (97) உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் காலமானார். 1998 முதல் 2003 வரை பிரதமராக இருந்த இவர், சீனாவை சந்தைப் பொருளாதாரப் பாதைக்கு திருப்பி, வறுமையைக் குறைத்து, பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்த முதன்மை சிற்பியாவார். அரசு அதிகாரிகள் சலுகைகளை எதிர்பார்க்காமல், மக்கள் சேவகர்களாக உண்மை பேச வேண்டும் என வலியுறுத்திய […]