இந்தோனேசியாவில் 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயங்கரக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான 41 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான சுராபாயாவில் (Surabaya) இருந்து தெற்கு சுலாவெசியில் அமைந்துள்ள மக்காசார் (Makassar) நகரை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இக்கப்பலில் பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட […]

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கும் வகையில் அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு உட்கட்டமைப்புகளை தகர்ப்பதற்கான இலக்குகளை ஈரான் விரிவாக தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தன. போர் தீவிரமடைந்த நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை […]

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் நாடு முழுவதும் பரவலாக நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், கடலோரப் பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உடனடியாக சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து குமாமோட்டோ, […]

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியா ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்ததும், உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் அதிகரித்துள்ளது. இதுவே இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், […]

நாளை காலை நீங்கள் எழுந்து பார்த்தால் உங்கள் மொபைலில் இன்டர்நெட் இல்லாமல் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். உங்கள் மெசேஜ்கள் அனுப்பப்படாது, பிடித்த ஆப்கள் திறக்காது, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் செயல்படாது, அலுவலக மின்னஞ்சல்களும் நின்றுவிடும். முதலில் இது உங்கள் Wi-Fi பிரச்சனை என்று தோன்றலாம். ஆனால் விரைவில் இது எங்கும் நடப்பதை நீங்கள் உணருவீர்கள். உலகமே இணையம் இல்லாமல் முடங்கியுள்ளது. இது ஒரு திரைப்படக் கதை போல தோன்றினாலும், ஒரு […]

ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வெப்ப அலை, தீவிரமான வெப்பநிலை எவ்வாறு விரைவாக பொது சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த நெருக்கடியாக மாறக்கூடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஜூன் 21 முதல் 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் பல நாடுகளில் மருத்துவமனைகள், மின்சார அமைப்புகள், போக்குவரத்து அமைப்பு மற்றும் அவசர சேவைகள் ஆகியவற்றின் மீது கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வார இறுதியில் கண்டத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 40 […]

ஆப்கானிஸ்தானுக்குள் மீண்டும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது.. நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிய வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ரேஞ்சர்ஸின் பிராந்தியத் தலைமையகத்தை தீவிரவாதிகள் தாக்கிய ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்படும் தீவிரவாதக் குழுக்களே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று இஸ்லாமாபாத் குற்றம் […]

வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,450-ஆக உயர்ந்தது.. அதேவேளையில், உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. புதன்கிழமையன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ‘லா குவைரா’ (La Guaira) மாநிலத்திற்கு, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டு மீட்புக் குழுக்கள் வந்து குவிந்தன. கடலோர மாநிலமான இங்கு, இடிந்து விழுந்த டஜன் கணக்கான […]

வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் 4.9 ரிக்டர் அளவிலான புதிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…நிலநடுக்கங்களைக் கண்காணிக்கும் EMSC அமைப்பின்படி, இந்த நில அதிர்வு மராகே நகருக்கு வடமேற்கே 61 கிலோமீட்டர் (36 மைல்கள்) தொலைவில் ஏற்பட்டுள்ளது. மராகே மற்றும் தலைநகரான கராகஸ் ஆகிய இரு இடங்களிலும் நில அதிர்வுகளைத் தெளிவாக உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை மாலையில் நாட்டைத் தாக்கிய பேரழிவுகரமான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்குச் சில நாட்களுக்குப் […]