ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில், ஒரு பெண் உயிரியல் ரீதியாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ உலகிலும் சட்ட ரீதியாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஐந்து குழந்தைகளுக்கு தாயான 27 வயதுடைய அப்பெண், குழந்தை இல்லாத வேறொரு தம்பதியினருக்கு உதவுவதற்காக எந்தவொரு பிரதிபலனும் இன்றி ‘வாடகைத் தாயாக’ மாற ஒப்புக்கொண்டார். இதற்காக கருத்தரிப்பு மையத்தின் மூலம் அந்த தம்பதியின் கரு அவரது கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. அதே காலகட்டத்தில், […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
நேபாளம் – திபெத் எல்லை மற்றும் போடேகோசி (Bhotekoshi) நதிப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமரும், அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தைப் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அமைச்சரவை ஒப்புதல்: வியாழக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நேபாள அரசின் செய்தித் தொடர்பாளரும், கல்வி அமைச்சருமான சஸ்மிதா பொகரேல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் இந்த […]
நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600ஐ நெருங்கிவிட்டது. மேலும் 2,500-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பேரிடர் நிகழ்ந்தபோது அப்பகுதியில் வேலை செய்வதற்காகவும், மலையேற்றத்திற்காகவும், புனித யாத்திரைக்காகவும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் அங்கு முகாமிட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களில் சிலர் நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாளம் மற்றும் சீனா: நேபாள நாட்டின் […]
நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று 586 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. நிலையற்ற தடுப்பு ஏரிகளால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அபாயத்திற்கு மத்தியிலும், மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். நேபாளத்தின் எட்டு மாவட்டங்களில் 579 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் […]
கோரமான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாளம் தவித்து வரும் நிலையில், உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலை இழுத்துச் சென்று அவரது காதணியைத் திருடிய கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோவில், நாராயணி நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலை இரண்டு நபர்கள் மரக்கட்டைகள் மற்றும் அப்பெண் முடியை பிடித்து வெளியே இழுக்கின்றனர். பின்னர், பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, […]
பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, திபெத் பகுதியில் மேல்நோக்கி அமைந்துள்ள ஒரு அணை உடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, நேபாளத்தில் வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு […]
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடர்ந்து நீடித்துவரும் சூழலில், இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ள ஈரான், “நாங்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் மகனைக் கொல்லத் திட்டமிட்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்குப் பின்னால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. லெபனானை தளமாகக் கொண்ட ‘அல்-மனார்’ ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சின் […]
நேபாளம் மற்றும் திபெத்தில் 460-க்கும் மேற்பட்டோர் பலியான பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ‘சின்குவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 1:13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் லோங்சாங் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன. சீனா நிலநடுக்க வலைப்பமைப்பு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் […]
நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் உள்பட 1,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேபாளத்தின் புதிய சுற்றுலா வாரியத்தின் தரவுகளின்படி, அந்நாட்டைச் சேர்ந்த 178 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்தத் துயரமான நிகழ்வில் […]
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு இயற்கையாக உருவாகியுள்ள ஒரு பிரமாண்ட தடுப்பு ஏரி தற்போது நிரம்பி வழிவதாகவும், அடுத்த சில நாட்களில் அது உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீன நீர்வள அமைச்சகத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் […]

