ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஏறக்குறைய ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். “பிரதமர் மோடி அவர்களே, நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் மோதலுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக கூறிய டிரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும் கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்தார். தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்ட அவர், ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் “ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது கிழக்கு […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் இராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறிய போதிலும், பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காக கெஞ்சுகிறார்கள் என்று கூறினார். அமெரிக்காவின் முன்மொழிவை வெறுமனே பரிசீலித்து வருவதாக ஈரான் பகிரங்கமாகக் கூறிய நிலைப்பாட்டையும் அவர் நிராகரித்தார். தனது ட்ரூத் சோஷியல் பதிவில் பதிவிட்டுள்ள டிரம்ப் “ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மற்றும் ‘விசித்திரமானவர்கள்’. அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்யுமாறு எங்களிடம் கெஞ்சுகிறார்கள். ராணுவ ரீதியாக முற்றிலுமாக […]

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி, பந்தர் அப்பாஸில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று ஒரு இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.. ஹார்முஸ் நீரிணையை மூடியதற்கு அலிரெஸா டங்சிரியே பொறுப்பு என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.. பந்தர் அப்பாஸ், ஹார்முஸ் நீரிணையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவை உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளுடன் இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் போக்குவரத்துத் தடையாகும். மேலும், அமைதிக் […]

நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற ‘நட்பு நாடுகள்’ பயன்படுத்த அனுமதித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் ஒரு பதிவில், “ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி: சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகள் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. டிரம்பின் முன்மொழிவுக்கு ஈரானின் முதல் எதிர்வினையாகக் கூறப்படும் நிலையில், 15 அம்ச போர் நிறுத்த திட்டத்தை அளவுக்கு மீறியது என்று நிராகரித்துள்ளது.. ஹார்முஸ் நீரிணை மீதான இறையாண்மை உட்பட புதிய கோரிக்கைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஈரான் 5 புதிய கோரிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்த போருக்கான இழப்பீடு, ஈரான் மற்றும் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் நடந்து வரும் போருக்கு மத்தியில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை நிலைநிறுத்துவதாகக் கூறப்படுவது குறித்து ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரான் பிராந்திய நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இஸ்ரேலின் ‘மாயைக்கு’ அமெரிக்கா விலை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அமெரிக்கா மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களை […]

ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் மழை பொழிகிறது. ஆனால், ‘மழை’ என்றால் என்னவென்றே இவர்களுக்கு தெரியாத ஒரு கிராமம் உலகில் உள்ளது. அங்குள்ள மக்கள் மழையை காண்பது மிக அரிது. இருப்பினும், அப்பகுதி தனது இயற்கை அழகால் சுற்றுலாப் பயணிகளையும் புகைப்படக் கலைஞர்களையும் வெகுவாக ஈர்க்கிறது. அங்குள்ள மக்களுக்கு மழையைப் பற்றி அதிகம் தெரியாது. இதைக் கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. மழையே பெய்யாத […]

மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், உலகின் பல்வேறு நாடுகளின் இராணுவ வலிமை குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, போர்க்களங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் நீண்ட தூர ஏவுகணைகள் மீதான ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது. நீண்டதூரம் செல்லும் ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகள் குறித்து பார்க்கலாம்.. ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் ரஷ்யாவே தற்போது முன்னணியில் இருப்பதாகப் பாதுகாப்புத் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட […]

ஈரான் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 10 மில்லியன் ரியால் கரன்சியை வெளியிட்டுள்ளது. எண்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ​​இது ஒரு பெரிய தொகையாகத் தோன்றலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அங்குள்ள நாணயத்தின் மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சியடைந்ததே, இந்தப் பணத்தாள் தேவைப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஈரான் ரியாலின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், சிறிய மதிப்புள்ள பணத்தாள்களைக் கொண்டு பெரிய தொகைகளைச் செலுத்துவது கடினமாகிவிட்டது. அதனால்தான், அதிக மதிப்புள்ள பணத்தாள்கள் அச்சிடப்பட்டு பொதுமக்களின் […]