மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மீண்டும் திறப்பதற்கு ஈடாக, அங்குள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தளர்த்துவது குறித்து அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க-ஈரான் மோதலின் தொடக்கத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை மறிக்க ஈரான் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இந்த உடன்பாடு எட்டப்பட்டது. “ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மீண்டும் […]

2020-ஆம் ஆண்டில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த நாட்களில், சொகுசு கப்பல்களில் (cruise ships) பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அக்காலகட்டத்தில், பல நாடுகளும் குறிப்பிட்ட சில கப்பல்களைத் தங்கள் கடற்கரைகளுக்குள் நுழையத் தடை விதித்தன; இதனால் அந்தக் கப்பல்களில் இருந்த பயணிகள் தங்களைக் காப்பாற்றுமாறு உதவி கோரினர். அந்தக் கப்பல்களுக்குள்ளேயே கொரோனா பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். அதேபோன்றதொரு சம்பவம் தற்போது மீண்டும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு […]

இந்தியாவிற்கான ஈரானின் உச்சத் தலைவரின் பிரதிநிதியான அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி, சனிக்கிழமையன்று பேசுகையில், ஈரானுக்கு இப்போரைத் தொடங்கும் விருப்பம் இருக்கவில்லை என்றும், ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், தொடர் தாக்குதல்கள் நடைபெற்றதால் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஈரான் தள்ளப்பட்டது என்றும் கூறினார். “ஈரான் இந்த போரை விரும்பவில்லை; மாறாக, போரின் சூழலால் ஈரான் கட்டாயப்படுத்தப்பட்டது. பலமுறை ஈரான் இந்த போரைத் தவிர்க்க முயன்றது… இந்த […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. இந்த மோதல் மீண்டும் தீவிரமடைவதற்கு “வாய்ப்பு அதிகம்” என்றும், அமெரிக்கா ஒப்பந்தங்களை மதிக்கத் தவறிவிட்டது என்றும் அவை குற்றம் சாட்டியுள்ளன. ஈரானின் இராணுவத் தலைமையகத்தின் துணைத் தலைவர் முகமது ஜாஃபர் அசாதி, வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளின் சமீபத்திய நடவடிக்கைகளும் அறிக்கைகளும், இராஜதந்திர முயற்சிகளுக்கு உண்மையான அர்ப்பணிப்பு இல்லாததையே […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்தினார்; மேலும், மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாமல் ஐரோப்பாவையும் காப்பாற்றுவதற்காகவே ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் நியாயப்படுத்தினார். புளோரிடாவில் உள்ள ‘தி வில்லேஜஸ்’ (The Villages) பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க அனுமதிக்கப்பட்டால், […]

மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மீது மீண்டும் போரின் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானுடனான தற்போதைய பதற்றங்களை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் முக்கியமான மற்றும் தீவிரமான இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ‘Axios’ வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, வியாழக்கிழமையன்று, அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) மூத்த அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்து, ஈரானின் மீதான தாக்குதல்களுக்கான சமீபத்திய உத்திகளை விளக்கினர். சுமார் […]