விமானங்களில் பவர் பேங்குகளைப் (power banks) பயன்படுத்துவது குறித்து தாய்லாந்து அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. பதிவு செய்யப்பட்ட உடைமைகளில் (checked baggage) பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பயணிகள் அவற்றை தங்கள் கைப்பை அல்லது கையடக்க உடைமைகளில் (hand luggage) மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். 100 வாட்-அவர் (Wh) வரை திறன் கொண்ட […]

இந்த தொழில்நுட்ப யுகத்தில், அவ்வப்போது பல நபர்கள் சமூக வலைதளில் கவனம் பெற்று வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது, ​​’ஜேவியர்’ (Javier) என்ற நபர் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறார். தான் எதிர்காலத்திலிருந்து வந்ததாக அவர் கூறுகிறார்.. அதாவது 2027-லிருந்து 2026-க்கு வந்ததாகச் சொல்கிறார். டிக்டாக்கில் (TikTok) அவருக்கு @unicosobreviviente என்ற கணக்கும், யூடியூபில் (YouTube) ‘unico sobreviviente’ என்ற கணக்கும் உள்ளன. அவரது யூடியூப் சேனலில் 722 வீடியோக்களும், […]

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாகவும், 14 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் இன்று தெரிவித்தது. தலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வான்வழித் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானின் கோஸ்ட், குனார் மற்றும் பக்திகா மாகாணங்களைக் குறிவைத்தன என்று தெரிவித்தார். இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் அடங்குவர். எனினும் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.. இந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. சுமார் 200 பேர் காயமடைந்தனர். அப்பகுதியின் பொருளாதார மற்றும் அரசியல் குறைகள் தொடர்பான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வந்த முக்கிய சிவில் சமூகக் கூட்டமைப்பான ‘ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி’யை (JAAC) அதிகாரிகள் கடந்த வாரம் தடை செய்தனர். இதையடுத்து அங்கு போராட்டங்கள் […]

சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது. ஜப்பானின் உட்சுனோமியா (Utsunomiya) நகரில், காட்டு கருப்பு கரடி ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மூன்று நாட்களாக வீதிகளில் சுற்றித் திரிந்ததையடுத்து அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் ஒரு மீட்டர் நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட இந்த ஆசிய கருப்பு கரடி, முதலில் நகரின் பூங்கா ஒன்றின் அருகே காணப்பட்டது. பின்னர் அது வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK), பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சிக்கல்கள் குறித்துப் போராடி வரும் ‘கூட்டு அவாமி செயல் குழு’ (JAAC) என்ற சிவில் சமூக அமைப்பை அரசு தடை செய்ததைத் தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்தன.. இந்த போராட்டங்களில் 11 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஒரு செயல்பாட்டாளரின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை பிணவறைக்கு வெளியே JAAC […]

ஓமன் கடற்கரைக்கு அப்பால் உள்ள பதற்றமான கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த, பலாவு (Palau) நாட்டின் கொடியை ஏந்திய சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளது.. அது ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. இந்த தாக்குதல் கப்பலின் இயந்திர அறையைச் (engine room) சிதைத்து, பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதோடு, கடல்சார் சமூகத்தினரிடையே பெரும் பீதியையும் உருவாக்கியது. குஜராத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இயந்திரமயமான சரக்குக் கப்பலாக […]

இன்று பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் மிண்டனாவ் (Mindanao) தீவின் தெற்கு கடற்கரைக்கு அப்பால், சரங்கனி (Sarangani) பகுதிக்கு அருகே கடலில் அமைந்திருந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) ஆகியவற்றின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் காலை 7:37 மணிக்கு சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதாவது, […]

இந்தியா தனது அணு ஆயுத இருப்பை பாகிஸ்தானை விட அதிகமாக விரிவுபடுத்தியுள்ளது.. ஜனவரி 2026 நிலவரப்படி இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் (warheads) உள்ளன. மறுபுறம், பாகிஸ்தானிடம் தொடர்ந்து சுமார் 170 அணு ஆயுதங்களே உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.., தனது ‘ஆண்டு அறிக்கை 2026’-ல் (Yearbook 2026), இந்தியாவின் அணு ஆயுத இருப்பு 10-ஆல் […]