ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும், அவரது தனிப்பட்ட செய்தியையும் ரஷ்ய அதிபரிடம் அவர் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ சென்றடைந்த ஜெய்சங்கர், அதிபர் புதினுடனான சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் விவாதித்தார். வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் […]

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை குறித்து சிறப்புப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக இன்று (ஆகஸ்ட் 24) பெய்ஜிங் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. செப்டம்பர் 12, 13 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் […]

வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாரா (மச்சூவாபாரா) பகுதியில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், அவரது மனைவி, மகள் மற்றும் 12 வயது மகன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பூட்டிய வீட்டிற்குள் சந்தேகத்திற்குரிய வகையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நால்வரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் ரங்பூர் ஜில்லா பள்ளியின் ஓய்வுபெற்ற […]

டோக்கியோ பகுதி உட்பட கிழக்கு ஜப்பானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குறைந்தது 23 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து எதுவும் இல்லை. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படியும், இபாராகி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் 70 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் இப்பகுதியின் அளவை அமெரிக்க புவியியல் […]

ஈரான் போரினால் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மோதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770-ஐக் கடந்துள்ளதாகவும் பென்டகன் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போரை அமெரிக்கா தொடங்கியதிலிருந்து 18 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாகவும், 756 பேர் காயமடைந்துள்ளனர் எனப் பென்டகனின் casualty reporting system தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கிய நிலையில், தற்போது […]

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா, 50% வரி விதித்தது. பதிலுக்கு கனடாவும் வரி விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதலே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதித்து வரும் டிரம்ப், தற்போது கனடாவின் மீதும் இந்த வரி விதிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். […]

மியான்மரின் மத்திய சகைங் (Sagaing) பகுதியில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தின் மீது நேற்று(வெள்ளிக்கிழமை) ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், ஒரு வார கால தியான பயிற்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்த 14 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு மேற்கே சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள மியாங் டவுன்ஷிப்பின் ஸ்வெல் லே ஓ (Swel Le Oh) […]

அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூர ரேடார் தளம் அருகே நேற்று (வியாழக்கிழமை) சென்ற தனி விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் கூறுகையில், இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ததாக தெரிவித்தார். அவர்களின் தற்போதைய நிலை […]

அமெரிக்கா – இரான் இடையேயான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவிவரும் பதற்றம் காரணமாக, அங்குப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய மாலுமிகள் மீண்டும் ஒருமுறை பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஈரான் தொடர்பான சமீபத்திய மோதல் நிகழ்வுகளில் ஒன்றாக, கடந்த ஏப்ரல் 22 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில் 21 இந்தியர்கள் உள்பட 22 பணியாளர்களுடன் […]

சோமாலியாவின் புன்ட்லான்ட் கடற்கரை அருகே துருக்கி நாட்டு ராணுவ ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலை கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதில் 6 இந்தியர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் சிக்கியுள்ளனர். கமரூன் நாட்டு கொடியுடன் இயங்கும் ‘எம்/வி லுடுப்’ (M/V LUTUF) என்ற இந்த சரக்குக் கப்பல், சோமாலியாவின் புன்ட்லான்ட் பகுதியில் உள்ள எய்ல் மாவட்டத்தில் உள்ள மர்ரா என்ற இடத்திற்கு அருகில் திங்கள்கிழமை அன்று கடத்தப்பட்டு,  நுகால் […]