நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உருவாகி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கங்கையின் கிளை நதிகளான கோஷி மற்றும் கண்டக் (நாராயணி) ஆறுகளில் வெள்ளநீர் அபாய அளவைத் தாண்டிப் பெருக்கெடுத்து வருவதால், அண்டை […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
நேபாளத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முழு தயார் நிலையில் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இந்த இக்கட்டான பேரிடர் காலகட்டத்தில், நேபாளத்தின் சகோதர, சகோதரிகளுக்குத் துணை நிற்பதில் […]
நேபாள நாட்டின் போட்டேகோஷி ஆற்றுப்படுகையில் உருவான திடீர் கோர வெள்ளத்திற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவே முதன்மை காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார். Nepal Floods | போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் அப்பகுதியிலிருந்த பல்வேறு கிராமங்களை வாரிச்சுருட்டி அடித்துச் சென்றுள்ளதுடன், சியாப்ருபெசி உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் மாயமானவர்களின் எண்ணிக்கை […]
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தெற்கு கார்டோபன் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஆயுதக்குழுவினர் நேற்று நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். குவார்டாட் மற்றும் அபு ஹமாமா உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய குழுவினர் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட மொத்தம் […]
அரசாங்க உதவித் தொகையைச் சார்ந்து வாழக்கூடிய வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களின் மீது கடுமையான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில், உலகெங்கிலும் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் குடியேற்ற விசா நேர்காணல்களை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விசா நேர்காணலைத் திட்டமிட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அமெரிக்கக் குடியேற்றச் சட்டத்தின் […]
ஹைதி நாட்டின் தலைநகருக்கு அருகில் உள்ள கென்ஸ்காஃப் கிராமத்தின் மீது ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஹைதியில் நடந்த மிகப்பெரிய பெருந்திரள் கடத்தல்களில் இதுவும் ஒன்றாகும் என்று அஞ்சப்படுகிறது. தேவாலயம் ஒன்றில் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகுந்த 22 பேர் உட்பட குறைந்தது 47 பேர் […]
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய வணிக சமூகத்தினரிடையே உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக விளங்குவதாகவும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது நிகரற்ற வாய்ப்புகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாரிய அளவு, நிலையான வளர்ச்சி, இளைய சமுதாயம், அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மூலதனச் சந்தைகள் ஆகியவை கனடிய முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்காத […]
அமெரிக்காவில் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டதன் எதிரொலியாக, நடப்பாண்டில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘காமன் ஆப்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காமன் ஆப்’ என்பது அமெரிக்கா மற்றும் பிற 18 நாடுகளில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும். கடந்த 2024-2025 கல்வி ஆண்டைக் காட்டிலும், 2025-2026 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் சேர விரும்பும் […]
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (PIMS) மருத்துவமனையில் இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள மகப்பேறியல் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவின் நர்சரிப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஏசியின் கம்ப்ரசர் வெடித்ததே இந்தத் தீ […]
வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், எஃகு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா அரசுபதிலடி வரிகளை விதித்துள்ளது. இந்த வர்த்தக மோதலில் கனடா தனது இலக்காக 700-க்கும் மேற்பட்ட அமெரிக்க தயாரிப்புகளைக் குறிவைத்துள்ளது. இந்த வரி விதிப்புப் பட்டியல் தொழில்துறைப் பொருட்களைத் தாண்டி, கடல் உணவுகள், சீஸ், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் டாய்லெட் பேப்பர் போன்ற […]

