ஈபிள் கோபுரத்தின் செயல்பாடுகள் திங்கட்கிழமை அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதன் திறப்பு தாமதமானது. BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) அமைப்பைச் சேர்ந்த இந்து ஆன்மீகக் குழுவினர் கோபுரத்தைப் பார்வையிட வந்தபோது, பெண் ஊழியர்கள் ஓரங்கட்டப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோபுரத்தின் நுழைவாயிலில் “செயல்பாட்டு காரணங்களுக்காக திறப்பு தாமதமானது” என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டு […]

யேமனின் வட பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது திங்கட்கிழமை சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற குழுவிற்கும், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசுப் படைகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜவ்ப் மாகாணத்தில் உள்ள மூலோபாய நகரமான ஹஸ்மில் உள்ள மத்திய சிறைச்சாலை […]

இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து பாரிய மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட திடீர் தாக்குதலைப் போன்றே இது இருக்கும் என்றாலும், தொடக்கத்திலிருந்தே மிகத் துல்லியமான ஒருங்கிணைப்புடன் இது திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, ஈரானின் நேரடி ராணுவ வலிமையுடன் லெபனானைச் சேர்ந்த […]

கேப் வெர்டே (Cape Verde) நாட்டின் ஃபோகோ (Fogo) தீவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த நெஞ்சை உலுக்கும் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 9:00 மணியளவில் காம்பனாஸ் டி சிமா (Campanas de Cima) சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சா தாஸ் கால்டெராஸ் […]

மேற்கு ஈரானில் உள்ள சனந்தாஜ் மற்றும் ஹமேடான் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில், சனிக்கிழமை நிகழ்ந்த விபத்து காரணமாக எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. டேங்கர் லாரி வெடித்ததில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த பல வாகனங்களுக்கும் பரவி சேதத்தை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சனந்தாஜ் நகரில் […]

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். கலிஃபோர்னியாவின் வடமேற்கு ஃப்ரெஸ்னோ பகுதியில் உள்ள ‘சியரா ஸ்கை பார்க்’ (Sierra Sky Park) விமான நிலையம் அருகே, பிளைத் அவென்யூ பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிறிய ரக விமானம் திடீரென […]

தாய்லாந்தில் ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சை செய்துகொண்ட பிரிட்டன்-நைஜீரிய சமூக ஊடக பிரபலம் மற்றும் தொழிலதிபரான இகோ “டைனி” உபிரிகோ (43), சிகிச்சையில் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக உயிரிழந்தார். லண்டனைச் சேர்ந்த 43 வயதான இகோ உபிரிகோ, தனது மனைவியுடன் தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு கிளினிக்கில் 40 மில்லி லிட்டர் ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic Acid) மற்றும் லிடோகைன் (Lidocaine) ஊசிகளைச் செலுத்திக்கொண்டார். சிகிச்சைக்குப் […]

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்றுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் வருகையை முன்னிட்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்த தற்காலிக போர்நிறுத்த […]

வியட்நாமில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற பிரம்மாண்டமான 73-வது உலக அழகிப் போட்டியில் (Miss World 2026), டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹெய்ரி மோலா (Joheirry Mola) வெற்றி பெற்று ‘மிஸ் வேர்ல்ட் 2026’ மகுடத்தைக் கைப்பற்றினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், கடந்த ஆண்டின் உலக அழகியான தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்சஸ்ரீ அவருக்கு புதிய கிரீடத்தைச் சூட்டினார். இந்தப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னஸ் முதல் ரன்னர்-அப் […]

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், பல மாதங்களாக குப்பைகள் நிறைந்த ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல அமைப்பின் தலைவர் நேரடியாக வேலை வாய்ப்பு ஆஃபர் கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி (என்கிற பிட்டு தபாஹி), தன் சொந்த செலவில் (சுமார் ₹30,000) அஜ்னார் (Ajnar) […]