வங்கதேசத்தில் கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்துள்ள தட்டம்மை நோய் பரவலால், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை குறைந்தது 986 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், தட்டம்மை பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1,80,000-ஐத் தாண்டியுள்ளது. தலைநகர் டாக்காவில் உள்ள முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகளின் வார்டுகள் […]

ஈரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு அருகே பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஈரானின் அரசு சார்ந்த ‘நூர்நியூஸ்’ (Nournews) செய்தி வெளியிட்டுள்ளது. […]

கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறை நிலச்சரிவைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. இந்தத் துயரத்தின் சுவடுகள் இன்னும் மாறாத நிலையில், தார்ச்சுலா (Darchula) மாவட்டத்தில் ஏற்பட்ட புதிய நிலச்சரிவால் மீண்டும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தார்ச்சுலா மாவட்டத்தின் அபி ஹிமால் பகுதியில் உள்ள பட்டார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அதிக அளவிலான மண் மற்றும் இடிபாடுகள் […]

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் தங்கும் மலையேற்ற வீரர்களால் வெளியாகும் சிறுநீர் மற்றும் எரிபொருள் பயன்பாடு, அங்கிருக்கும் பனிப்பாறைகளை வேகமாக உருக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. Regional Environmental Change என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, நேபாளத்தின் முதன்மை நில அளவையாளரும் புவிசார் விஞ்ஞானியுமான கிம் லால் கெளதம் (Khim Lal Gautam) தலைமையிலான குழுவினர் நடத்தியுள்ளனர். ஆய்வில், உயரமான பகுதியில் […]

நேபாளம் நாட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். திடீரென பெருக்கெடுத்து ஓடிய கடும் காற்றாற்று வெள்ளத்தால், அந்நாட்டின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் பெரும்பகுதி ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கி வீடுகள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், போக்குவரத்துச் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. […]

இந்தியாவை கேவலப்படுத்தி, சுகாதாரமற்ற நாடாக காட்டும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அமெரிக்கப் பெண் ஒருவர் அதற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய நபர் ஒருவர், தனது பெரிய தொப்பையின் மீது ரொட்டி உருட்டுவது போன்றும், நெற்றி வேர்வையை துடைப்பது போன்றும் அருவருப்பான காட்சி ஒன்று இணையத்தில் பரவியது. சுமார் 2.8 கோடி பார்வைகளை கடந்த இந்த வீடியோ, இந்தியாவில் […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின்போது சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவில் சிக்கி இதுவரை 1,282 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 […]

நேபாள திடீர் வெள்ளத்தால் 1200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் இன்று ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின்தகவல்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி பிற்பகல் […]

நேபாளத்தில் போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா மற்றும் சித்வான் ஆகிய 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் குடிநீர் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மொத்தம் 7,570 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,253 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளன; 6,317 வீடுகள் மிகக் பலத்த சேதமடைந்துள்ளன. தனியார் வீடுகளுக்கு மட்டும் சுமார் 17.31 […]

நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் போது, திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் பணியாற்றிய 265 தொழிலாளர்களை ஆபத்தில் தவிக்கவிட்டு சீன மேற்பார்வையாளர் ஒருவர் தப்பி சென்றதாகத் தப்பிய தொழிலாளி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சுரங்கப்பாதையில் நிலவிய பீதி: சுரங்கப்பாதை எண் 3-ல் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராஜ் சேத்ரி என்ற தொழிலாளி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், பேரழிவு ஏற்பட்டபோது சுமார் 265 […]