அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சி படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், போரின் முடிவை […]

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பிறகு, வெளிநாடுகளில் செயல்படும் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக ஒரு “செயல்பாட்டு சிக்னல்” (operational trigger) அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இடைமறித்த ஒரு குறியாக்கப்பட்ட (encrypted) செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வான்வழி தாக்குதல்களை […]

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் தொடங்கி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிப்ரவரி 7 அன்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் முக்கிய எரிபொருள் நிலையங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தின. பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள மக்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் […]

சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தை ஏவுகணை போன்ற இராணுவ குண்டு தாக்கிய சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடந்த அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒரு இந்தியர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தூதரகம் கூறியுள்ளது. “நேற்று மாலை அல்-கர்ஜ் பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் […]

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல் ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், இந்த முடிவு தனியாக அவர் எடுக்கும் ஒன்று அல்ல என்றும், பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து “பரஸ்பரமாக” எடுக்கப்படும் முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தானும், நெதன்யாகுவும் இல்லையெனில் ஈரான் இஸ்ரேலை முழுமையாக அழித்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் பேசிய டிரம்ப், ஈரான் இஸ்ரேலையும் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் […]

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் இன்று அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முதல் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.. மேலும், ஈரானின் இடைக்கால தலைமைக்குழு எடுத்த முக்கிய முடிவை அவர் அறிவித்தார். அதன்படி, ஈரான் மீது தாக்குதல் அந்த அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து தொடங்காத வரை, அந்த நாடுகளுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அல்லது வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளாது […]

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் உலகளாவிய பொருட்கள் சந்தைகளிலும் தெரிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரானைச் சுற்றியுள்ள பிரச்சினை தீவிரமாகும் நிலையில், சர்வதேச தங்க வர்த்தக மையமாக இருக்கும் துபாயில் தங்கம் தற்போது தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இதற்குக் காரணம் போக்குவரத்து தடைகள் மற்றும் தங்கத்திற்கு இருக்கும் தேவை குறைந்திருப்பது ஆகும். துபாய், பெரிய அளவிலான தங்க வர்த்தக சந்தையைக் கொண்டதால் “தங்க நகரம்” […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு, தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் இருக்கும் ஒரு சிறுமிகள் தொடக்கப்பள்ளியை தவறாக “சட்டபூர்வமான ராணுவ இலக்கு” என்று அடையாளம் காட்டியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 7 முதல் 12 வயதுக்குள் இருக்கும் குறைந்தது 160 பள்ளி மாணவிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை […]