உலக அளவில் புகழ்பெற்ற பல தீர்க்கதரிசிகளில், பல்கேரியாவை சேர்ந்த பார்வையற்ற பெண்மணியான பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. அமெரிக்க 9/11 தீவிரவாதத் தாக்குதல், கொரோனா பெருந்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்துக் கூறியிருந்த இவர், 1996-ல் மறைந்த போதிலும் இன்னும் 3,000 ஆண்டுகளுக்கான உலக நிகழ்வுகளைத் தொகுத்து வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் இவர் கணித்தபடியே போர்கள், சர்வதேசப் பொருளாதாரத் […]

சூறாவளிப் புயல்கள், கொடூர நிலநடுக்கங்கள், வரலாறு காணாத வெப்ப அலைகள், திடீரென உடைந்து சரியும் பனிப்பாறைகள் என 2026ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக தீவிரமான இயற்கை பேரழிவுகளின் ஆண்டாக உருவெடுத்து விஞ்ஞானிகளையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, உலக வரலாற்றில் பல பெரும் பேரிடர்கள் நிகழ்ந்த ’26’ என்ற தேதி, இந்த ஆண்டும் நேபாள பனிப்பாறை சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. […]

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டவர் உட்பட 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பின் (NDRRMA) தகவல்படி, வெள்ள பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 272 உடல்களும், நவல்வராசி கிழக்கில் […]

வடக்கு சைப்ரஸ் கடற்கரை அருகே சுமார் 270 பயணிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 237 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை, கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தசுக்கு (Tasucu) துறைமுகத்திற்குச் சென்ற ‘காடமரன்’ (Catamaran) வகைப் படகு விபத்துக்குள்ளானது. படகு புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே, மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாகப் படகில் நீர் புகத் தொடங்கியது. டயானா கடற்கரையிலிருந்து […]

உஸ்பெகிஸ்தானில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய தேசிய விருதான ‘ஓலே தாராஜாலி தோஸ்ட்லிக்’ (Oliy Darajali Do’stlik) வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால அடிப்படையில் யுரேனியம் சப்ளை மற்றும் 5 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ், பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருதை வழங்கினார். இது பிரதமர் […]

நேபாளத்தில் சமீபத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய திடீர் வெள்ளப் பேரழிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலஞ்சோக் பகவதி அம்மன் சிலையில் இருந்து நீர்த்துளிகள் கசிந்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ள தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கவ்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மன்னர் மானதேவா ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் நாட்டின் மிக சக்திவாய்ந்த பழமையான சக்தி […]

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில் 589 வெளிநாட்டவர்கள் உட்பட 2,498 பேரை இன்னும் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை காற்றுப்புகாத பைகளில் வைத்து அடக்கம் செய்ய நேபாள அரசு […]

உள்நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், சீரான விநியோகத்தை உறுதி செய்யவும், டீசல் ஏற்றுமதிக்கான தடையை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ரஷ்யா நீட்டித்துள்ளது. உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பல சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி […]

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு, சேதமடைந்த கட்டமைப்புகளை மறுசீரமைக்க சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 40,000 கோடி ரூபாய்) வரை தேவைப்படலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், “இது முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. நாட்டின் சேதத்தை முழுமையாகக் கணக்கிடும் பணிகள் இன்னும் தொடர்ந்து […]

600-க்கும் மேற்பட்டோர் பலியான நேபாள பெருவெள்ளப் பேரிடரில், இந்தியாவின் விரைவான உதவிகளை நேபாள அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ‘பேரன்புடனும், தாராள மனதுடனும்’ செயல்படுவதாக நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மத்திய நேபாளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் […]