காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் தொடர்ந்து பரவி வரும் புண்டிபுக்யோ எபோலா நோய்த் தொற்று குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.. இந்த சூழலில் புதிதாக உருவாகி வரும் எபோலா வைரஸ் திரிபுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத, அரிதான புண்டிபுக்யோ திரிபுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கக்கூடும் […]

மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட இணையத் தடைக்குப் பிறகு, ஈரான் படிப்படியாக இணையச் சேவையை மீண்டும் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. இதனிடையே, நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா நம்பிக்கைத் துரோகஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் நடந்த இந்த […]

பெல்ஜியத்தின் புக்கென்ஹவுட் நகரில் செவ்வாய்க்கிழமை காலை பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.. இந்த விபத்தைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் குயின்டின், X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்தச் சம்பவம் குறித்துத் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். “புக்கென்ஹவுட்டில் பள்ளிப் […]