ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்று அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நான்கு வாரங்களைக் கடந்த நிலையில் டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த நடவடிக்கை, ஹார்முஸ் நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தக்கூடும்.. ஹார்முஸ் […]

மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் திட்டங்களை யதார்த்தமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அனைத்துத் தொடர்புகளும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டன என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். “ஈரானுக்கு […]

ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, ஐரோப்பா முழுவதும் பயணித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கிட்கேட் சாக்லேட் பார்கள் கொண்டு செல்லப்பட்ட ஒரு லார திருடப்பட்டுள்ளது. 12 டன்களுக்கும் அதிகமான சாக்லேட் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த லாரி 4 லட்சத்திற்கும் அதிகமான கிட்கேட் பார்களை ஏற்றிச் சென்றதுடன், மத்திய இத்தாலியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டது. மார்ச் 26 அன்று போலந்துக்குச் செல்லும் வழியில் அது திருடப்பட்டது என்று […]

1 மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.. அந்த வகையில் குவைத்தில் உள்ள பெரிய மின்சாரம் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையில் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.. இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.. அந்த ஆலையின் முக்கிய சேவைக் கட்டிடம் […]

பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடலில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பங்கேற்றதாக வெளியான ஊடகச் செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கு இடையே மட்டுமே நடைபெற்றது என்றும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து அது கவனம் செலுத்தியது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. “நாங்கள் அந்தச் செய்தியைப் பார்த்தோம். […]

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி, இன்று கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு உயிர்ப்பலிகளை ஏற்படுத்திய ‘Gen Z’ போராட்டங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. புதிய பிரதமராக பாலெந்திர ஷா பதவியேற்ற மறுநாளே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தபூர் மாவட்டத்தின் குண்டு (Gundu) பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து, நேபாளக் காவல்துறையினரால் ஒலி காவலில் எடுக்கப்பட்டார். ஒலி […]

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக, ஈரான் இதுவரை விடுத்ததிலேயே மிகவும் கடுமையான எச்சரிக்கைகளில் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC), இந்த முக்கிய நீர்வழிப்பாதையை மூடுவதாக அறிவித்துள்ளதுடன், அதன் வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. IRGC-யின் மக்கள் தொடர்புத் துறை இந்த அறிக்கையை வெளியிட்டது இந்த எச்சரிக்கை வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. உலகின் மிக முக்கியமான […]

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஏறக்குறைய ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். “பிரதமர் மோடி அவர்களே, நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் மோதலுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக கூறிய டிரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும் கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்தார். தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்ட அவர், ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் “ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது கிழக்கு […]