பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கிய கல்மேகி புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 6 பேரும் பலியான சோகமும் இதில் அடங்கும். புயலின் மையமாக விளங்கிய மத்திய பிராந்தியத்தில், குறிப்பாக செபு தீவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் […]

உலகின் மிக விலையுயர்ந்த காபி: நீங்கள் ஒரு ஓட்டலுக்கு காபி குடிக்கச் சென்று, மெனுவைப் பார்த்த பிறகு மிகவும் விலையுயர்ந்த காபியை ஆர்டர் செய்ய முடிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் பணியாளர் அந்த காபியின் விலை 87 ஆயிரம் ரூபாய் என்று உங்களிடம் கூறும்போது, ​​நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அது உண்மைதான். உலகின் மிக விலையுயர்ந்த காபி துபாயில் உள்ள ஒரு பூட்டிக் […]

பிரபல சமூக ஊடக தளமான ரெடிட் (Reddit) பல நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில், இன்று செயலிழப்பை (outage) சந்தித்தது. இதை உறுதிப்படுத்திய அந்நிறுவனம் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. பயனர்கள் புகார் டவுன்டிடெக்டர் (Downdetector) எனும் தொழில்நுட்பத் தள செயலிழப்புகளை கண்காணிக்கும் இணையதளத்தின் தகவலின்படி, அமெரிக்காவில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் ரெடிட் பயன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.இந்தியாவில், இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை […]

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான ஜி.பி. ஹிந்துஜா (GP Hinduja) இன்று காலமானார்.. அவருக்கு வயது 85. வணிக உலகில் ‘ஜி.பி.’ (GP) என அன்பாக அழைக்கப்பட்ட ஜி.பி. ஹிந்து ஜா, கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் லண்டனிலுள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டோரி பியர் ராமி ரேஞ்சர் (Rami Ranger) […]

இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் விசா விண்ணப்பங்களை மொத்தமாக ரத்து செய்ய அல்லது நிராகரிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதற்காக புதிய அதிகாரங்களைப் பெற கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது… இந்த நாடுகளில் இருந்து வரும் விண்ணப்பங்களில் “ஏமாற்று நடவடிக்கை (fraud) பிரச்சனைகள்” இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இந்திய மாணவர்களின் விசா மறுப்பு விகிதம் கடந்த ஆகஸ்டில் 74% […]

ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய இளைஞர் சூடானில் கடத்தப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் விரைவான ஆதரவுப் படைகள் (RSF) எனப்படும் போராளிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்துவதற்கு முன்பு, தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடம், ” ஷாருக்கானை உங்களுக்குத் தெரியுமா ?” என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவர் பிடிபட்டார். 2023 முதல் சூடானில் RSF மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. தலைநகர் […]

கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும் என்ற பழமொழியினை பலரும் கேள்விபட்டிருக்கலாம். உண்மை தான் கடன் இல்லாதவர்கள் இன்றைய உலகின் முதல் பணக்காரர்கள் எனலாம். கடன் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு இருந்தால் கூட போதும் நினைப்பவர்கள் பலர். ஆனால் கடன் இல்லாமல் வாழ முடியுமா? என்றால் அது நிச்சயம் கேள்விக்குறி தான். உலகமே இன்று கடனில் தான் முழ்கி கிடக்கிறது என்றால் அது மிகையாகாது. […]

அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான கிரவுண்ட் ஜீரோ அருகே வசிக்கும் மற்றும் பணிபுரியும் ஆண்களிடையே மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன. நியூயார்க் போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இதுவரை 91 ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோயை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டிற்கானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை 2018 இல் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை விட ஆறு […]

2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் வெப்பநிலை 1.5°C க்கு மேல் உயரக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போது வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. புவி வெப்பமடைதல் தான் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், உலக வானிலை அமைப்பின் (WMO) அறிக்கை ஒரு திடுக்கிடும் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அதன் படி, 2025 மற்றும் 2029 க்கு இடையில் பூமியின் சராசரி […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அணு ஆயுத பரிசோதனைகளை மீண்டும் தொடங்கியதற்கான தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் தங்களது ஆயுத திட்டங்களைத் தொடரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவிடம் “உலகத்தை 150 முறை வெடிக்கச் செய்யும் அளவு” அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டார். CBS சேனலின் 60 Minutes நிகழ்ச்சியில் […]