இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. ஏற்கனவே கடும் மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 25-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சிமியூலு தீவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது, மேலும் சேதம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” […]

சீனாவின் தெற்கு யுன்னான் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குன்மிங் ரயில் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. குன்மிங் நகரிலுள்ள லுயோயாங் டவுன் ரயில் நிலையத்தின் வளைவு பகுதியில், நிலநடுக்கத்தை கண்டறியும் சோதனைகள் நடத்தி வந்த ரயில், பாதையில் இருந்த தொழிலாளர்கள் மீது மோதிய போது இந்த விபத்து நடந்தது.. சீனாவின் தென்மேற்கு நகரமான குன்மிங் அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ […]

ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் காலை வரை தொடர்ந்து நிலையில் சுமார் 300 குடியிருப்பாளர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால குழுக்கள் தீப்பிடித்து எரியும் கட்டிடங்களிலிருந்து மக்களை வெளியே இழுத்து வருகின்றனர். பல தசாப்தங்களில் ஹாங்காங்கின் மிக மோசமான தீ விபத்தில், வாங் […]

இன்று ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த தீ விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தீ வேகமாக பரவியதால் சுமார் 700 குடியிருப்பாளர்கள் […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியின் அதியாலா சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.. இதையடுத்து, இம்ரான் கான் இறந்துவிட்டார் என்ற செய்தி பற்றிய பதிவுகளை பல நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பகிரத் தொடங்கினர். ஆனால், பாகிஸ்தான் அரசு அல்லது அதன் இராணுவத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுகுறித்து வெளியிடப்படவில்லை. இதனால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆயிரக்கணக்கான […]

எத்தியோப்பியா என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு பண்டைய நாடாகும். எரித்ரியா, ஜிபூட்டி, சோமாலியா, கென்யா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளால் இந்த நாட்டின் எல்லை சூழப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளால் ஒருபோதும் காலனியாக்கப்படாத ஆப்பிரிக்காவில் உள்ள ஒரே நாடு எத்தியோப்பியா ஆகும், மேலும் 3,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைக் கொண்ட பெருமையும் இந்த நாட்டிற்கு உள்ளது.. எத்தியோப்பிய சமூகம் மிகவும் பல்வகைமை கொண்டது. 80-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் இங்கு […]

அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் ஷாங்காய் விமான நிலையத்தில் தங்கியிருந்தபோது அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம், அந்தப் பெண்ணுக்கு நடத்தப்பட்ட குடிவரவு சோதனைகள் சீனாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் உட்பட்டே நடந்ததாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாவ் நிங், ” இந்தியா “அருணாசலப் பிரதேசம்” என்று அழைக்கும் பகுதியைப் பற்றி சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் கூறினார். மேலும் […]

பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, பெரும்பாலும் ‘பால்கான்களின் நொஸ்ட்ரடமஸ்’ என அழைக்கப்படுகிறார்.. அவரின் கணிப்புகள் மீண்டும் இணையத்தில் பரவி வருவதால் உலகளவில் மீண்டும் கவனம் பெறுகிறார். காலப்போக்கில், பாபா வங்கா பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.. இளவரசி டயானா மரணம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரின் மரணங்கள் ஆகியவை அடங்கும். அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான பாபா வங்கா கணிப்புகள் மீண்டும் வைரலாகி […]

வட எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வெடித்தததால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்தது போல் உணர்ந்ததாக அவர்கள் கூறினர்.. இந்த வெடிப்பில் உருவான தடித்த சாம்பல் மேகங்கள் செங்கடல் வழியாக யேமன் மற்றும் ஓமான் நோக்கி பயணம் செய்தன. எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் உள்ள இந்த எரிமலையின் வெடிப்பால் […]

iPhone தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் (Apple Inc.) நிறுவனம் அமெரிக்காவில் தனது விற்பனைத் துறையில் பணியாற்றும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என Bloomberg நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.. ஆப்பிள் நிறுவனத்தில் பணிநீக்கம் அரிதாக நடைபெறும் என்பதால் இந்த முடிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கம்பெனி, நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்குதனது தயாரிப்புகளை வழங்கும் முறையை மறுபரிசீலனை செய்து, எளிமைப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது… ஆப்பிள் நிறுவனத்தின் பதில் ஆப்பிள் […]