உலகளவில், மூன்றில் ஒரு பெண் தன் கணவர் அல்லது மற்றவர்களால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் நவ.25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், 168 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஐ.நா.,வின் பல்வேறு அமைப்புகள் உதவியுடன் இது தொடர்பாக விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. […]

உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது எதிர்கால கணிப்புகளை மேலும் வலுப்படுத்தி வருகிறார். சமீபத்தில் டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சம்பள திட்டத்தை பெற்றுள்ள அவர் வரவிருக்கும் காலத்தில் “பணம் என்பது விரைவில் அர்த்தமற்றதாக மாறிவிடும்” என்று தெரிவித்தார். அமெரிக்கா-சவுதி முதலீட்டு மன்றம் (US-Saudi Investment Forum) நேற்று வாஷிங்டன் DC-யில் நடைபெற்றபோது, எலான் மஸ்க் சில நிமிடங்கள் […]

நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் அனைத்தும் தங்கள் அண்டை நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. புவியியலில் இது மிகவும் பொதுவானது. வேறு சில நாடுகளும் உள்ளன, அவை மிகவும் வேறுபட்டவை. ஏனென்றால் அவை நாடுகளின் எல்லைகளை மட்டுமல்ல, கண்டங்களையும் பகிர்ந்து கொள்கின்றன. உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா. இந்த கண்டங்கள் ஒவ்வொன்றிலும் பல நாடுகள் […]

நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த “Gen Z” போராட்டத்தின் போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. இந்த நிலையில் முன்னாள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இளைஞர் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் பரா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அங்கு “Gen Z” இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள், முன்னாள் பிரதமர் கே.பி. […]

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று மீண்டும் ஒருமுறை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதட்டத்தை தானே குறைத்ததாக கூறினார்.. இரண்டு நாடுகளுக்கும் 350% வரி விதிப்பதாக மிரட்டியதால் அவர்கள் பின்னடைந்ததாக அவர் கூறினார். ட்ரம்ப் கூறியதாவது, “350% வரி மிரட்டலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் அழைத்து ‘நாங்கள் போருக்கு போகமாட்டோம்’ என்று தெரிவித்தார்.” மேல்ம் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் பதட்டத்தை தானே தீர்த்து வைத்தேன் […]

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிக்க ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு சத்தமே இல்லாமல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான போராட்டத்தை நிறுத்தும் ஒரு முன்னேற்றமாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் அமைதிக்கான 28 புள்ளிகளைக் கொண்ட திட்டத்தை ஒப்புக்கொண்டார் என்று உயர் தர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. […]

தேநீர், காபி, இலவங்கப்பட்டை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியிலிருந்து விலக்கு அளித்து டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. இதில், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த இந்த வரி, ஜவுளி முதல் தோல், நகைகள் மற்றும் கடல் உணவுகள் வரையிலான தொழில்களைப் […]

போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், லெபனானில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் பலியாகினர். இஸ்ரேல், லெபனான் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையே 2024ம் ஆண்டு போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிடான் நகரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் […]

மியான்மரின் அயேயர்வாடி டெல்டாவின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. குடிநீரில் உள்ள ஆர்சனிக் மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்திய ஆய்வின்படி, இப்பகுதியில் உள்ள 71% ​​கிணறுகளில் பாதுகாப்பான வரம்புகளை விட ஆர்சனிக் இருப்பதாகவும், இதனால் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆர்சனிக் என்பது As என்ற குறியீட்டையும், அணு எண் 33யும் கொண்ட […]

பூமியின் சுழற்சி ஒருபோதும் முழுமையாக நிலையானது அல்ல. பனிப்பாறைகள் உருகினால் அல்லது பெரிய அளவிலான எடை நகர்ந்தால், பூமி லேசாகச் சாயும் அல்லது அதன் சுழற்சி மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இந்தநிலையில் பூமி தனது அச்சில் இருந்து 31 அங்குலம் விலகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீர்ப்பாசனம் மற்றும் நகர்ப்புற பயன்பாட்டிற்காக அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், 1993 மற்றும் 2010 க்கு இடையில், தோராயமாக […]