செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உருவ ரோபோக்களின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து, உலக பணக்காரர் எலான் மஸ்க் அதிர்ச்சியூட்டும் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்குள், உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. கடின உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த பணிகளை ரோபோக்களே கையாளும். இந்த மாற்றத்தின் விளைவாக, பணம் அதன் மதிப்பை இழக்கும் என்றும், […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
சென்யார் மற்றும் டிட்வா என்ற 2 சக்திவாய்ந்த புயல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன.. இந்த புயல்களால் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.. இது இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கையை அதிகம் தாக்கியது.. இந்தியாவின் தெற்கு கடற்கரையிலும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. மலாக்கா ஜலசந்தியில் முதலில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் சென்யார் புயலாக மாறியது, இப்போது தென் சீனக் […]
எலான் மஸ்க் மீண்டும் உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில், மனிதர்கள் வேலை செய்ய வேண்டிய காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் சமூகத்தை முற்றிலும் மாற்றிவிடும், அந்த மாற்றத்தால் மக்கள் “வேலை செய்யவே வேண்டிய அவசியம் இருக்காது” என்று கூறினார்.. மேலும் “இன்னும் 20 ஆண்டுகளுக்குள்… நான் சொல்ல […]
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், தனது துணைவி மற்றும் Neuralink நிர்வாகி ஷிவோன் சிலிஸ்ள் பாதி இந்தியர் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவரின் இடைப்பெயர் ‘சேகர்’ (Sekhar) என்று வைத்திருப்பதாகவும் கூறினார். இந்த பெயர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் பெயரிடம் இருந்து எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த தகவலை அவர் […]
ஆசியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலையின் காரணமாக, இதுவரை சுமார் 1,000-க்கும் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் பருவமழை தாக்கம் : இந்தோனேசியா, இலங்கை, தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பொதுவாக இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழையால் கனமழை பொழியும். இந்தக் காலத்துடன் 3 வெப்பமண்டலச் […]
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ (Norovirus) என்ற மற்றொரு வைரஸ் பாதிப்பு சத்தமே இல்லாமல் வேகமாகப் பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீப வாரங்களாக இந்த வைரஸ் பாதிப்பு விகிதம் கணிசமாக உயர்ந்து, அந்நாட்டில் ஒரு புதிய சுகாதார சவாலை உருவாக்கியுள்ளது. இது பொதுமக்களிடையே இயல்பாகவே அச்சத்தை அதிகரித்துள்ளது. நோரோவைரஸ் என்றால் என்ன..? நோரோவைரஸ் என்பது இரைப்பைக் குடல் அழற்சியை […]
டிட்வா புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் இலங்கையில் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 130 பேரை இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியில் அழிவு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களுக்கு மத்தியில், டிட்வா புயல் இலங்கையை விட்டு வெளியேறியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை ஆய்வுத் […]
நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான எல்லை தகராறு மீண்டும் ஒருமுறை தலை தூக்கி உள்ளது. நேபாளத்தின் மத்திய வங்கி வியாழக்கிழமை 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது.. அந்த நோட்டில் மூன்று இந்திய பிரதேசங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன: கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா.. இது சர்ச்சையைத் தூண்டியது. நேபாளம் தொடர்ந்து இந்தப் பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது, ஆனால் இந்த மூன்று பகுதிகளும் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்றும், எந்த ஒரு தரப்பினரும் […]
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 21க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை காரணமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மக்களைத் தவிர்த்து, இலங்கை அரசு வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த புயல் இந்தியாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கான […]
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காகவும் புடின் இந்தியா வருவார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு […]

