உலக அளவில் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில், இந்தியா 9-வது இடத்தில் இருப்பதாக காலநிலை அபாய குறியீடு (CRI – Climate Risk Index) அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. புயல், சுனாமி, நிலநடுக்கம், தொடர் வெள்ளம் என பல்வேறு வகையிலான பேரிடர்களால் இந்தியா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் (1995-2024) மட்டும் நாடு சுமார் 430 மிக கடுமையான இயற்கை பேரழிவுகளை சந்தித்துள்ளது […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களைப் படிக்க அனுமதிப்பது நாட்டின் கல்வி முறைக்கும் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் என்றும், அதைக் கட்டுப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. சர்வதேச மாணவர் சேர்க்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும். […]
பிறந்தநாள் என்பது அனைவருக்கும் ஒரு சிறப்பு நாள். மக்கள் இந்த சிறப்பு நாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். ஆனால் உலகில் ஒரு நாட்டில் மக்கள் தங்கள் பிறந்தநாளைக் கூட அறியாதது உங்களுக்குத் தெரியுமா? உலகிலேயே வட கொரியாவில் மட்டுமே பொதுமக்களுக்கு அவர்களின் சரியான பிறந்த தேதி கூட தெரியாது. வட கொரியா உலகின் மிக மர்மமான நாடு, அங்கு அதன் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மக்கள் […]
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஒவ்வொரு ஆண்டும் 24 முதல் 44 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை ஏற்படுத்தக்கூடும், இது தோராயமாக 5 முதல் 10 மில்லியன் கார்கள் வெளியேற்றும் உமிழ்வுக்கு சமம்.AI வேகமாக முன்னேறும்போது, அது சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக மாறி வருவதை இந்தத் தரவு காட்டுகிறது. நேச்சர் சஸ்டைனபிலிட்டி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, AI இன் அதிகரித்து […]
நீண்ட ஆயுள் மற்றும் சாகா நிலை குறித்த விவாதம் சர்வதேச அளவில் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒரு சீன உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மாத்திரைகளை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இந்த தகவல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபருக்கு இடையே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான உரையாடலின் எதிரொலியாக வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் […]
ஜார்ஜியா-அஜர்பைஜான் எல்லைக்கு அருகே நடுவானில் சென்றுக்கொண்டிருந்த துருக்கி விமானப்படையின் C-130 ஹெர்குலஸ் (TUAF543) விமானம் திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர். அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அஜர்பைஜான் எல்லையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) தொலைவில் உள்ள ஜார்ஜியாவின் ககேட்டி பகுதியில் C-130 போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதாக துருக்கிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . ஜார்ஜிய சிக்னாகி நகராட்சிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து மீண்டும் ஊகங்கள் கிளம்பியுள்ளன. சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள ஒரு புகைப்படத்தில், அவரது கை வீக்கத்துடன் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.. கடந்த வாரம் எடுத்ததாக கூறப்படும் வீடியோவில், 73 வயதான புடினின் வலது கை சுருக்கங்களுடனும் வீங்கிய நரம்புகளுடனும் தென்பட்டது. அவர் அசௌகரியமாக தோன்றியதுடன், 22 வயதான யேகதெரினா லெஷ்சின்ஸ்கயா (Russian Healthy Fatherland இயக்கத் தலைவர்) சந்திக்கும் போது தன் […]
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று மதியம் ஒரு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 24 பேர் காயமடைந்தனர்.. குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. உள்ளூர் ஊடகங்கள் வாகனத்திற்குள் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தன, ஆனால் அது குறித்து போலீசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. குண்டுவெடிப்பு நடந்த நீதிமன்ற வளாகம் […]
பாகிஸ்தான் நாடு வரலாறு காணாத மிக மோசமான சமூக மற்றும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, அந்நாட்டின் முக்கியச் சேவை அமைப்பான ஜேடிசி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சையத் ஜப்பார் அப்பாஸ் அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்டுப்பாடற்ற வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளால் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கராச்சியில் உள்ள படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் துயரத்தைப் பற்றிப் பேசிய […]
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். ஈக்வடார் நாட்டின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. கடந்த ஞாற்றுக்கிழமை இங்கு திடீரென இரண்டு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு […]

