முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாமதமான முடிவுகள் காரணமாக ஆரம்பத்தில் நாட்டில் கூடுதலாக 23,000 கோவிட் இறப்புகளுக்கு பங்களித்ததாக UK COVID விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, ஜான்சன் ஆரம்பத்தில் வைரஸின் தீவிரத்தை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார், மேலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதைத் தொடர்ந்து தாமதப்படுத்தினார். இந்த அறிக்கையின் தலைவரான முன்னாள் நீதிபதி ஹீதர் ஹாலெட், தொற்றுநோய் காலத்தில் அரசாங்கம் நச்சுத்தன்மை வாய்ந்த மற்றும் குழப்பமான சூழலை அனுபவித்ததாகக் கூறினார். […]

வங்கதேசத்தின் டாக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் கட்டிடங்களை சேதப்படுத்தியது, பல இடங்களில் தீ விபத்துகளை ஏற்படுத்தியது மற்றும் குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவில் நான்கு பேரும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியான நர்சிங்டியில் ஐந்து பேரும், புறநகர் நதி துறைமுக நகரமான நாராயண்கஞ்சில் ஒருவரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் காசிபூரின் புறநகரில் உள்ள தொழில்துறை நகரத்தில் மட்டும், […]

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் பாபிரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்க உறைவிடப் பள்ளியை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கி அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 12 ஆசிரியர்களை கடத்திச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள நைஜர் மாகாணத்தில் உள்ள அக்வாரா பகுதியில் செயின்ட் மேரீஸ் என்ற தங்கும் வசதியுடன் கூடிய கத்தோலிக்க பள்ளி செயல்படுகிறது. யெல்வா மற்றும் மோக்வா நகரங்களை இணைக்கும் முக்கிய சாலை […]

உலகின் சிறந்த நகரங்களின் புதிய உலகளாவிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் லண்டன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய மாற்ற சகாப்தத்தின் மத்தியில், ரியல் எஸ்டேட், சுற்றுலா மற்றும் பொருளாதார மேம்பாட்டில் ஆலோசகரான ரெசோனன்ஸ் கன்சல்டன்சி மற்றும் அதன் ஆராய்ச்சி கூட்டாளியான இப்சோஸ் ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களை உலகளவில் 100 நகரங்களை தரவரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளன. Resonance Consultancy மற்றும் […]

துபாயில் விபத்துக்குள்ளான தேஜாஸ் ஜெட் விமானத்தின் விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் கடைசி காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதில், விமானி விங் கமாண்டர் நம்னாஷ் சியால் உயிரிழந்தார். துபாயின் அல் மக்தூம் விமான நிலையத்தில் ஒரு டெமோ விமானத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க இந்திய விமானப்படை விசாரணை நீதிமன்றத்திற்கு […]

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் துபாய் ஏர் ஷோ தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, ஹோஸ்ட் ஏர்லைன் எமிரேட்ஸ் தனது 40வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறது. இந்த ஏர் ஷோ நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜர் போர் விமானம் இன்று துபாய் ஏர்ஷோவில் வானில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு விமான சாகங்களை செய்து கொண்டிருந்தபோது […]

இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜர் போர் விமானம் இன்று துபாய் ஏர்ஷோவில் வானில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு விமான சாகங்களை செய்து கொண்டிருந்தபோது இந்த போர் விமானம் திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது.. எனினும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினாரா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.. விபத்துக்குப் […]

பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத் மாவட்டம் மாலிக்பூரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததால், தொழிற்சாலை கட்டிடங்களில் ஒன்று உட்பட அருகிலுள்ள கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் பைசலாபாத் துணை ஆணையர் ராஜா […]

இன்று காலை வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது, இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் (உள்ளூர் நேரப்படி) காலை 10.38 மணியளவில் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் […]

இன்று காலை வங்கதேசத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கத்தால் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்க அதிர்வு காலை 10.08 மணி முதல் 10.10 மணி வரை சில விநாடிகள் உணரப்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கொல்கத்தா, மல்டா, நாதியா, கூச் பெஹார் மற்றும் பல மாவட்டங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தக்ஷிண் மற்றும் உத்தர் தினாஜ்பூர் பகுதிகளிலும் அதிர்வு […]