கோவை அருகே பணத்திற்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்!

கோவை மாவட்டம் சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(22). இவர் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடைய தாயார் ஒரு தையல் தொழிலாளி.இந்த நிலையில், அவருடைய தையல் கடைக்கு சரோஜா என்ற 60 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய துணிகளை தைப்பதற்காக கொடுத்து வந்திருக்கிறார். எப்போதும் சரோஜாவின் துணிகளை தைத்துவிட்டு அதனை தன்னுடைய மகனிடம் கொடுத்தனுப்பி பணம் வாங்கி வர சொல்வாராம் வசந்தகுமாரின் தாயார்.


அதேபோல வசந்தகுமார் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் அந்த ஆன்லைன் வர்த்தகத்தில் அவர் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்.இந்த நிலையில் தான் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சரோஜினி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமுகை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சரோஜினியை கொலை செய்து வீட்டில் இருந்த 14 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது கல்லூரி மாணவரான வசந்தகுமார் தான் என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைத்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வந்தார்கள். இந்த நிலையில் ,தான் சரோஜினியை கொலை செய்தது சடையம்பாளையத்தை சார்ந்த முருகன் என்பவரின் மகனும் தனியார் கல்லூரி மாணவருமான வசந்தகுமார் என்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே காவல்துறையினர் வசந்தகுமாரை கைது செய்திருக்கிறார்கள்.

Next Post

இந்த மூலிகைக்காக தான் சீன வீரரர்கள் ஊடுருவினரா? 1கிராம் இவ்வளவு லட்சங்களா?

Tue Dec 27 , 2022
அரியவகை மூலிகையாக கருதப்படும் கீடா ஜாடி-யை தேடித்தான் சீன வீரர்கள் சட்ட விரோதமாக இந்தியாவினுள் நுழைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹிமாலயன் தங்கம் என்று அழைக்கப்படும் இந்த மூலிகைக்கு பல பெயர்கள் உள்ளன, இந்தியாவில் இதை கீடா ஜாடி எனவும், சீனா மற்றும் நேபாளத்தில் யார்சா கும்பா, திபெத்தில் யார்சா கும்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தோ-பசிபிக் சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் கம்யூனிகேஷன்ஸ் (ஐபிசிஎஸ்சி) இன் புதிய அறிக்கையின்படி, அருணாச்சல பிரதேசத்தில் […]
china keeda jadi

You May Like