டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவரான பூனம் ராஜ்புத் என்பவர் டெல்லி காவல் துறையில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அதில் தன்னிடம் 4.5 கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் இது தொடர்பாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, குற்றவாளிகள் அந்த பெண் மருத்துவரிடம் ஸ்பைக் கால் மூலமாகவே பேசி இருக்கிறார்கள் அதன் மூலமாகத்தான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் வழங்கிய விவரங்களின் அடிப்படையில், கடந்த 5ம் தேதி அந்த பெண்ணுக்கு முதல் அழைப்பு வந்திருக்கிறது அப்போது ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மும்பையில் இருந்து தைவானுக்கு அவருடைய பெயரில் அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த பார்சலில் மருத்துவரின் பாஸ்போர்ட் வங்கி ஆவணம், காலணிகள் உள்ளிட்டவை தவிர 140 கிராம் போதை பொருளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்கின்ற பெயரில் மும்பை அந்தேரி காவல் நிலைய காவல்துறையினர் போலவும் ரிசர்வ் வங்கி, சுங்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போலவும் பலமுறை அந்த மருத்துவரிடம் பேசியிருக்கிறார்கள்.
அந்த மருத்துவரிடம் தன்னுடைய பெயர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி 23 வாங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றனர் என்றும், அந்த வங்கி கணக்குகளில் இருக்கின்ற பணத்தை சரி பார்ப்பதற்காக நிரந்தர வைப்பு நிதியில் உள்ள தொகை உட்பட அனைத்து வங்கி டெபாசிட் தொகையையும் முன்கூட்டியே முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல் அந்த மருத்துவரிடம் வாங்கி கணக்குகளில் உள்ள மொத்த பணத்தையும் ரிசர்வ் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், ஆர்பிஐ அவற்றை சரிபார்த்த பின்னர் மறுபடியும் திருப்பி வாங்கி கணக்கில் செலுத்தும் என்றும் கூறி இருக்கிறார்கள்.
அதோடு, நம்பகத்தன்மையை காட்டிக்கொள்வதற்காக ரிசர்வ் வங்கியின் பெயரில் கடிதம் மும்பை காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு வெளியிட்டவற்றை டாக்டருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதனை நம்பி சபைர் வில்லன்கள் வழங்கிய வங்கி கணக்கிற்க்கு பணத்தை மாற்றி இருக்கிறார். அந்த மருத்துவர் அதோடு அவருடைய பணமும் பறிபோய் விட்டது.
மருத்துவர் பூனம் ராஜ்புத் வழங்கிய புகாரின் அடிப்படையில், டெல்லி காவல்துறையினர் இந்திய தண்டனைச் சட்டம் 420 468, 471,389,170 மற்றும் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றன டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் வியூக செயல்பாடுகள் பிரிவு இது பற்றி விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.