fbpx

சென்னை அருகே 16 வயது சிறுமி கொடூர கொலை…..! காதலை ஏற்க மறுத்ததால், நடந்த விபரீதம்….!

முன்பொரு காலத்தில், தன்னை காதலித்த பெண் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று நினைத்த காலம் போய், தற்போது தன்னை காதலித்த பெண்ணோ, அல்லது தான் காதலித்த பெண்ணோ, தன்னுடைய காதலை ஏற்க மறுத்து, தன்னை விட்டு விலகிச் சென்றால், அவர்கள் உயிருடனே இருக்கக் கூடாது என்ற மனநிலை தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, சென்னையை சேர்ந்த வசந்த் என்பவர். கனிஷ்கா என்ற 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனாலும் இவருடைய காதலுக்கு கனிஷ்கா சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அவரை தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பின்தொடர்ந்து, அவருக்கு பல்வேறு விதத்தில் தொந்தரவு கொடுத்துள்ளார் வசந்த்.

ஆனாலும் அவர் வசந்தின் காதலை ஏற்க தயாராக இல்லை. இதனால், விரக்தி அடைந்த வசந்த், தன்னை காதலிக்காத கனிஷ்கா, இனி உயிரோடு இருந்து பயனில்லை என்று யோசிக்க தொடங்கினார். அதன்படி அவரை கொலை செய்யவும் திட்டம் தீட்டினார்.

அதன்படி, அந்த மாணவி வண்டலூர் பகுதியில் இருக்கின்ற தன்னுடைய கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வசந்த், சிறுமி கனிஷ்காவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கனிஷ்காவை சரமாரியாக குத்தி உள்ளார். பின்னர் அந்த இடத்திலிருந்து வசந்த் தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த கனிஷ்கா உடனடியாக அருகில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதோடு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற வசந்த் என்ற இளைஞரை மிக தீவிரமாக தேடி வருகிறார்கள். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஒரு தலை காதல் காரணமாக, வசந்த் அந்த சிறுமியை கத்தியால் குத்தியுள்ளார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

Next Post

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கூட்டு பலாத்காரம்..!! துப்பாக்கி முனையில் கொடூர சம்பவம்..!!

Fri Sep 22 , 2023
ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்த குடும்பத்திற்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த குடும்பத்தினரை அந்த கிராமத்தில் இருந்து வெளியேறுமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அந்த குடும்பம் இருந்த வீட்டுக்குள் துப்பாக்கி மற்றும் கத்தியோடு, 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. பின்னர், அங்கிருந்த குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப […]

You May Like