ஆளுங்கட்சியை எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவீங்களா..? திமுக இதை வேடிக்கை பார்க்காது..!உதயநிதி எச்சரிக்கை..!

cm vijay udhanidhi

திமுக GEN Z குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் தவெக அரசை விமர்சித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.. மேலும் சமீபத்தில் திமுக  GEN Z சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்.. இந்த நிலையில் அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.. எனினும் அவரை கைது செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது..


அன்பானந்தத்தை கைது செய்ய முயற்சித்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது. கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் – அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?

நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள். கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : “CM நிகழ்ச்சியில் தயவு செஞ்சு கரண்ட்டை மட்டும் கட் பண்ணிடாதீங்க சார்.. அசிங்கமா போய்டும்..!” விஜய் அரசை பங்கம் செய்த அதிமுக ஐடி விங்..!

RUPA

Next Post

ஈரானுக்கு தேவையில்லாமல் போகாதீங்க..! இந்தியா எச்சரிக்கை..! புதிய அறிவுறுத்தல்கள் வெளியீடு..!

Wed Jun 24 , 2026
ஈரானில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு ஈரான் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் புதன்கிழமையன்று அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. சமீபத்திய சாதகமான முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரை பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டது. இப்பகுதியில் 3 மாதங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஈரான் மற்றும் […]
airport

You May Like