பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றனர்.ஆனால் இது போன்ற செய்திகள் எப்போதாவது செய்தி தாள்களின் வந்தால் கூட பரவாயில்லை. நாள்தோறும் இப்படியான செய்திகளை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.
நாள்தோறும் இது போன்ற செய்திகளை செய்தித்தாள்களில் பார்க்கும் போதெல்லாம் என்னதான் நடக்கிறது? நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? நம்முடைய மனதை துளைத்து எடுக்கின்றன.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சட்டங்கள் தமிழக அரசாலும், மத்திய அரசாலும் இயற்றப்பட்டிருந்தாலும் இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றன.
அப்படி என்றால் எதற்காக இத்தனை சட்டங்கள்? அந்த சட்டங்கள் என்னதான் செய்கின்றன? இந்த சட்டங்கள் இயற்றப்பட்டது மக்களுக்கான வெறும் கண்தொடைப்பா? என்ற கேள்விகள் மக்களிடையே எழ செய்கின்றனர்.
அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 48 வயது வனக்காப்பாளர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமீபத்தில் புகார் எழுந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி அவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ப்ரோக்ஷோர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட வனக்காப்பாளரை கைது செய்தனர்