துணைவேந்தர் பதவி வாங்கி தருவதாக தெரிவித்து கல்லூரி முதல்வரிடம் 1 கோடி ரூபாய் மோசடி…..! மாவட்ட எஸ்பிக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை…..!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனதில் நான் தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறேன். எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிலர் 1 கோடி ரூபாய் கேட்டனர். ஆண் அவர்கள் கூறிய மூன்று வங்கி கணக்குகளில் 95 லட்சம் ரூபாயை செலுத்தினேன். ஆனால் எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி கொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.


மேலும் இது தொடர்பாக நான் கேள்வி எழுப்பிய போது 18 லட்சத்தை மட்டும் திரும்பி கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை கொடுக்கவில்லை. இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் வழங்கினேன் காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆகவே இந்த வழக்கை வேறு ஒரு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுநீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றப்பிரிவு காவல்துறையினர் தரப்பில் மனுதாரரிடம் பண மோசடி செய்தவர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பெயரில் முடித்து வைக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிபதி மனுதாரரின் புகார் தீவிரமானது. விசாரணை நடத்திய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும் என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் காரணமாக, வழக்கு முடிக்கப்பட்ட அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதோடு மனுதாரர் பனி மோசடி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புதிதாக மனு வழங்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Post

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை…..!

Sat Mar 25 , 2023
தமிழகத்தில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட மாதங்களில் வெயில் தான் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக […]
Chennai Rain 3

You May Like