தமிழக அரசியல் களத்தில் ‘மக்கள் ஒற்றுமை கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கமால் பாஷா புதிய கட்சியின் பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ கொடியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் பேசிய கட்சியின் தலைவர் கமால் பாஷா, “த.மு.மு.க. மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடன், பல கட்சிகளைச் சேர்ந்த […]

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்கள் தலா ரூ.800 வீதம் வாங்கியதில் நிதி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அதற்கான செலவினங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி மீது தமிழ்நாடு பொது விநியோக திட்ட ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பால்ராஜ் என்பவர் ஐகோர்ட் மதுரைக் […]

சென்னையில் தெருநாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் இன்று (ஆகஸ்ட் 11) முதல் தொடங்குகிறது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளும் வழங்கப்பட உள்ளன. 30 குழுக்கள் களத்தில் இறக்கம்:மாநகராட்சி சார்பில் இந்தப் பணிக்காக 30 சிறப்பு […]

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, மதுபான பாட்டில் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக தினசரி அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மதுபானங்களை பயன்படுத்திய பின்னர் காலியாகும் பாட்டில்களை சேகரித்தல், மறுசுழற்சி […]

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.. வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யத் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசலும், அதனுடன் வெயிலின் தாக்கமும் சேர்ந்து இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமடைந்ததாகவும், மயக்கமடைந்த 87 பக்தர்களுக்கும் கோயிலின் தேவசேனா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது […]