காசா அமைதி ஒப்பந்தம்… அதிபர் Trump-க்கு போன் செய்து வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி…!

Trump modi 2025

காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடலின்போது, இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை தலைவர்கள் இருவரும் ஆய்வு செய்தனர்.  இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக,  வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து  ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்; “எனது நண்பரான அதிபர்  டிரம்ப் உடன் உரையாடினேன், காசா அமைதித் ஒப்பந்தத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்தோம். வரும் வாரங்களில் இருவரும் தொடர்ந்து  ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஷாக்!. ஜப்பானில் லாக்டவுன்?. வேகமாக பரவி வரும் வைரஸ்!. தீவிரமடைந்த கட்டுப்பாடு!. உலக நாடுகள் அதிர்ச்சி!.

Fri Oct 10 , 2025
ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் ஒரு பெரிய அதிகரிப்பைக் காண்கின்றன, இது நாடு தழுவிய தொற்றுநோயை அறிவிக்க அதிகாரிகளைத் தூண்டுகிறது. இந்த வைரஸ் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்று நோய் பரவல் காரணமாக ஜப்பான் முழுவதும் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஜப்பானில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் […]
Japan Flu Season

You May Like