சோனு என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மன்புரா காட்டில் உள்ள ஒரு கிணற்றில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். 3 தினங்களுக்கு பின்னர் அவருடைய உறவினர்கள் அவரை காணவில்லை என்று புகார் வழங்கினர்.
முழுமையான காவல்துறையினரின் விசாரணைக்கு பிறகு சோனுவின் தாய் மற்றும் சகோதரரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். சோனு ஒரு இளைஞருடன் தொலைபேசியில் பேசுவது, அவருடைய தாய் மற்றும் சகோதரனை எரிச்சல் அடைய செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆத்திரத்தில் கோடாரியால் தாக்கி கொலை செய்துவிட்டு, கொலை செய்த ஆயுதங்களை அழித்துவிட்டு உடலை கிணற்றில் வீசி இருக்கின்றன. சோனுவின் தாயார் சாந்தி பேகத்திடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அந்த இளைஞனுடன் பேசுவதை நிறுத்துமாறு தன்னுடைய மகளை சமாதானப்படுத்த முயற்சி செய்ததாகவும், ஆனாலும் அவர் சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி மதியம் சாந்தி பேகம் சோனு வை கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய மகன் ஹனிப்புடன் அவரது உடலை கிணற்றில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார் எனவும் தெரிவித்து அவர் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொண்டார். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.