சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், கனமழை மற்றும் சூறைக்காற்றால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், சுமார் 6 விமானங்கள் வானில் வட்டமடித்தன.
மேலும், புதுச்சேரியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த ஹெலிகாப்டரும் மீனம்பாக்கத்தில் தரையிறங்க முடியவில்லை. தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் அமித்ஷா விமான நிலையம் சென்றடைந்தார்.
Read More : கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!



