ரூ.12,000 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார், பரிசாரகர், காவலர், இரவு காவலர், திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 15 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.


தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 12,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 22.11.2022 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1juNQX1a4SI5giJf7kkG930ZgfDWsP44q/view

Vignesh

Next Post

கணவருடன் சண்டை.. நினைவுக்கு வந்த Ex.பாய் பிரண்ட்.. அடுத்த அரங்கேறிய கொடூரம்.!

Sat Nov 12 , 2022
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற 24 வயது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு குமரன் என்ற 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிய வந்து உறவினர் கோபிநாத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் சில […]
Fake Love

You May Like