சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் திருமணியின் மனைவி அருகே உள்ள ஒரு பகுதியில் துணி தைக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இத்தகைய நிலையில் தான் திருமணி ஒரு அதிர்ச்சிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது மனைவியின் துணி தைக்கும் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் ஈடுபடுமாறு தொடர்ந்து அவர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அவருடைய மனைவி கண்டித்ததால், அவரை அடித்து உதைத்து இருக்கிறார்.
பின்னர் மனைவி மற்றும் மகன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் திருமணியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.