மகனை பறிகொடுத்து கதறும் பெற்றோர்.! தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற போது விபத்து!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினரின் 2 1/2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சுதாகர், சென்னையில் ஐடி துறையில் வேலை செய்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சுதாகர் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா , 2 1/2 வயது பெண் குழந்தை சுஷ்மிதாவுடன் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு காரில் சென்றிருக்கிறார்.

சென்னையிலிருந்து கரூர் சென்ற குடும்பத்தினரின் கார் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இவர் சென்னையில் இருந்து இரவில் புறப்பட்டு கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வனவாசி டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை மேடு பள்ளமாக பழுதடைந்து இருந்த நிலையில் கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 15 அடி உயர பள்ளத்தில் இருந்து உருண்டு கவிழ்ந்து இருக்கிறது.

சுதாகர் சீட் பெல்ட் போட்டு இருந்த காரணத்தால் அவருக்கு எந்தவிதமான அடியும் இல்லை. ஆனால் குழந்தையும் மனைவியும் சீட் பெல்ட் போடாமல் இருந்ததால் மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தை தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறது.

உயிரிழந்து கிடந்த குழந்தையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு தந்தை கதறி அழுதது சம்பவம், அவ்வழியாக சென்ற பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. மகிழ்ச்சியாக தீபாவளியைக் குடும்பத்துடன் கொண்டாட சென்ற இத்தம்பதியற்கு நடந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

தாமதமாக வீட்டிற்கு வந்த மனைவி..!! கோழிக்கழிவு குப்பையில் கிடந்த சாக்கு மூட்டை..!! அதிர்ந்துபோன போலீஸ்..!!

Sun Oct 23 , 2022
உறவினர் வீட்டுத்திருமணத்துக்கு சென்று விட்டு தாமதமாக வீட்டிற்கு திரும்பிய மனைவியை அடித்துக் கொலை செய்து மூட்டையாக கட்டி குப்பை குழியில் வீசிவிட்டு, மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புத்தூர் வயல் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (59). இவருக்கு 53 வயதில் உஷா என்ற மனைவியும் இரு மகன்களும் இருந்தனர். ஒரு மகன் பெங்களூருவிலும், ஒரு மகன் வெளிநாட்டிலும் வேலை பார்த்து வருகிறார்கள். […]
Murder Crime

You May Like