சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேலூர் மாதா கோயில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.
அப்போது லவ் டுடே படம் குறித்தும் பேசினார்கள். இதையடுத்து, இருவரும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா என்று அரவிந்த் கேட்டுள்ளார். அதன்படி இருவரும் 2 வார காலம் செல்போனை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து அரவிந்தின் செல்போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த பெண் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவள் பார்த்த வீடியோ அவளை பயத்தில் உறைய வைத்தது. அந்த வீடியோவில் 15 வயது சிறுமி நிர்வாணமாக இருந்துள்ளார்.
அந்த வீடியோவை எடுத்தது அரவிந்த் தான் என்பதை அந்த பெண்ணும் உறுதி செய்துள்ளார். பின்னர், இந்த வீடியோவை தான் பார்த்ததாக அரவிந்திடம் அப்பெண் கூறவில்லை. ஆனால் இது குறித்து அவர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தை, போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது வீடியோவில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை அரவிந்த் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.