காதலி வீட்டினர் போட்ட நாடகம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட காதல் ஜோடி.!

சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே 26 வயதான கோபி விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக கோபி காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.


சிறுமியின் வீட்டிற்கு சென்று கோபி பெண் கேட்டுள்ளார். 18 வயது முடிந்த திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவரை அதன் பின் வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் அதிர்ச்சி அடைந்த கோபி மற்றும் சிறுமி இருவரும் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்தனர்.

இதை அறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இருவருமே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#எச்சரிக்கை : அடுத்த 3 மணி நேரத்தில்., 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கவுள்ள மழை.!

Thu Oct 27 , 2022
தமிழகம் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழ அடுக்கு சுழற்சியினால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுபோல காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]
Rain

You May Like