சூப்பர்…! தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி கட்டாயம்…! அரசு கொண்டு வரப்போகும் அதிரடி மாற்றம்…!

நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கும் செயலியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 98.3 % பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி, அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.


அதேபோல், ஜனவரி மாதம் முதல் தர்மபுரி, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படவுள்ளது. பொதுமக்களின் வரவேற்பைப்பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அதேபோல், பொருட்களைக்கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து நேரடியாக, அரவை ஆலைகளுக்கு எடுத்துச்சென்ற பின்னர் அவை உணவு தானியக்கிடங்குகளில் கொண்டு சேர்க்கும் வகையில், டெண்டர் விடுவதற்காகப் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பழம்பாசி, சுண்டவேரின் அற்புத குணங்கள் பற்றி அறிந்துள்ளீர்களா?

Fri Nov 4 , 2022
ஆதிவாசிகளின் மருத்துவமே அனைத்து மருத்துவத்திலும் ஆற்றல் மிகுந்தது. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் ஆதிவாசிகள் வசிக்கிறார்கள். இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் கஷாயங்களில் முக்கிய இடம் பெறுபவை இவை தான். வேந்தரம் கஷாயம், தசமூலாரிஷ்டம், ஜிரகரிஷ்டம் […]
பழம்பாசி

You May Like