அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி..!! தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வாபஸ்..!!

Chennai 2026

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தூய்மைப் பணியாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களின் சுகாதாரப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று அவசரப் பேச்சுவார்த்தை நடத்தியது.


முதற்கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து நியாயமான வாழ்வாதார கோரிக்கைகளையும் அமைச்சர்கள் விரிவாக கேட்டறிந்தனர். தொடர்ந்து நடந்த ஆலோசனையின் முடிவில், அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசுத் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமைச்சர்கள் குழுவின் இந்த சாதகமான முடிவையும், அரசு வழங்கிய திட்டவட்டமான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் கூட்டமைப்பினர், கடந்த இரண்டு வாரங்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

Read More : “எனக்கு புருஷனே வேண்டாம்”.. 13 வயது மகன் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!

Next Post

காலை உணவுத் திட்ட சாம்பாரில் சாணி பவுடர் கலப்பு..! மாணவியை தூண்டிவிட்ட கொடூரம்..! 200 மாணவர்களின் உயிர்..! சத்தியமங்கலத்தில் பேரதிர்ச்சி..!

Fri Sep 4 , 2026
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பள்ளி மாணவியை தூண்டிவிட்டு சாணி பவுடரை கலக்கச் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில், தினமும் குழந்தைகளுக்கு பரிமாறுவதற்கு முன்பாக உணவுகளை தலைமை ஆசிரியர் சுவைத்துச் சரிபார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் […]
Erode 2026

You May Like