முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் அநாகவிகமான முறையில் நடந்து கொள்வதற்கு ஆண்கள் சற்றே தயக்கம் காட்டினார்கள். ஆனால் அந்த தயக்கம் தற்போது இல்லை.சொந்த வீட்டிலேயே பெண்களுக்கு எதிராக அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதற்கு பயந்த இளைஞர் சமுதாயம், தற்போது பொது இடத்திலே அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதற்கு துணிந்திருக்கிறது.
அந்த வகையில், சென்ற வருடம் ஜூன் மாதம் 9ம் தேதி மதியம் ஒரு மணி அளவில் 19 வயது பெண் ஒருவரை ரயில் நிலையத்தில் வைத்து முத்தமிட முயற்சி செய்த இளைஞர் ஒருவருக்கு நீதிமன்றம் ஒரு அதிரடி தண்டனையை வழங்கி இருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் மும்பையில் உள்ள விலே பார்லேயில் இருந்து பாந்த்ராவிற்கு தன்னுடைய கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அந்த இளம் பெண் கர் ரயில் நிலையத்தில் இறங்கினார். தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது மற்றொரு ரயிலுக்காக அந்தப் பெண் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒரு இளைஞர் அந்தப் பெண்ணை முத்தமிட முயற்சி செய்தார். உடனே அந்தப் பெண் கூச்சலிட அங்கிருந்து சக பயணியர்கள் அவரை பிடித்து தாக்கத் தொடங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புகார் வழங்க அந்த பெண்ணை பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது மேலும் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் பிகே கவுண்டே தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது, தகவல் அறிந்தவரின் சாட்சியங்கள் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நோக்கத்துடனும், அறிவுடனும் குற்றவியல் சக்தியை பயன்படுத்தியதாக தெளிவாக காட்டுகின்றது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
3 மாதங்களுக்குள் முடிவடைந்த இந்த விசாரணையில் ஜூன் மாதம் ரயில் நிலைய நடைமேடையில் 19 வயது மாணவியை வலு கட்டாயமாக முத்தமிட முயற்சி செய்த 25 வயது இளைஞனுக்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஒரு வருட கால கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.