நாள்தோறும் செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி செய்தித்தாள்களை பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் செய்தித்தாள்களில் வெளிவரும் பல செய்திகளை படித்தால் நாளை முதல் செய்தித்தாளையே பார்க்க வேண்டாம் என்று பொதுமக்கள் முடிவு எடுக்கும் அளவிற்கு ஒரு சில கொடூரமான செய்திகளை எல்லாம் பொதுமக்கள் பார்க்க நேரிடுகிறது.
செய்தித்தாளை புரட்டினால் அனைதினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படியான செய்திகள் தான் அதிகம் வெளியாகின்றனர்.
இப்படியான செய்திகளை பார்க்கும்போது, நம்மால் இதை தடுப்பதற்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படும் பாமர மக்கள் ஏராளம்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காட்கோபர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை கழிவறைக்குள் 3 சிறுவர்கள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட்டவர் அந்த சிறுமையை வலுக்கட்டாயமாக கழிவறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ பதிவு எடுத்துள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த வீடியோவை அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் பார்த்து உறவினர்களுக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்ததாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காட்கோபர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்ட சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு காவல்துறையினர் அனுப்பி இருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில், அடுத்த கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் மும்பை மாநகரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.