“இந்த அட்ரஸ் எங்க இருக்கு?’ வடக்கன்ஸ் காட்டிய வேலை.. பொது மக்கள் தர்ம அடி.!

பழனி பகுதியில் உள்ள திருநகரில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துக்குமாரி (வயது 34) தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிக்கு படித்து வருகிறார். பழனி திருநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள், முத்துக்குமாரியிடம் முகவரி ஒன்றை காட்டி அதற்கு வழியும் கேட்டுள்ளனர். அவர் முகவரியை பார்த்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென முத்துக்குமாரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் திருடன்…என் சங்கிலி… என்று கத்தியதும் அங்கே நின்ற பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களை விரட்டி பிடித்தனர். மேலும் அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தாறுமாறாக அடித்துள்ளனர்.

இந்த நிலையில் தகவலறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து அந்த இருவரையும் மீட்டு விசாரித்து வருகின்றனர். காவல்துறையினரின் விசாரணையில், இருவரும் வடமாநில பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவம் அதிகமா நடைபெற்று வருகின்றன நிலையில், தற்போது முகவரி கேட்பது போல் நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விருப்பம்’..!! பாகிஸ்தான் வீரர் சொன்ன காரணம்..!!

Thu Nov 10 , 2022
டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியுடனான முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி நுழைந்துள்ளது. இந்தச் சூழலில் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் […]

You May Like