தற்போதைய நவீன வாழ்கையில் அனைவரும் மரங்களை வளர்த்து பராமரிக்க முடியாமல் போனாலும், சிறிய செடிகளை வளர்ப்பது ஏதுவாக உள்ளது. இது வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருக்கிறது. அதற்கு மேலாக, வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில செடிகள், நம் வீடுகளுக்குள் நன்மைகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்தும் செடியைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். பணத்தை ஈர்க்கும் செடி என்றாலே […]
பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 -15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக 1-ஆம் வகுப்பு முதல் […]
உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். சுவாசத்தை சுத்தமாக வைத்திருப்பது முதல் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது வரை, உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் பின்பற்றக்கூடிய பல்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும், இவை பெரிய பழக்கவழக்கங்கள் மட்டுமே, மேலும் உங்கள் நுரையீரலை சேதப்படுத்தும் சிறிய அன்றாட விஷயங்கள் இருக்கலாம், அவற்றில் ஒன்று உங்கள் தலையணை. உங்கள் தலையணை பழையதாகி, சரியாக பராமரிக்கப்படாவிட்டால், அது நுரையீரலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். குருகிராமில் […]
தற்போதைய இளைய தலைமுறை பெண்கள், காலில் கருப்பு கயிறு அணிவது பரவலாக இருந்து வருகிறது. ஆனால், இது அழகுக்கான அலங்காரமல்ல. இதன் பின்னால் பழமையான மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன. பண்டைய தமிழ் சமூகத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உடலைத் தீய ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தக் கருப்பு கயிறை அணிந்தனர். மரபின்படி, பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கருப்பு கயிறை கட்டுவது […]
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும். இதன் […]
வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் “நிதி உங்கள் அருகில்” மற்றும் “சுவிதா சமகம்” குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் “நிதி உங்கள் அருகில்” மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன. வருங்கால வைப்பு நிதி […]
கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]
தவெக மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் பதிவு செய்த வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த மாநாட்டின் போது […]
ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் பலியாகினர்; 14 பேர் காயமடைந்தனர். மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரிலிருந்து தலைநகர் காபூல் நோக்கி சென்ற பேருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு விபத்தில் சிக்கியது. அதாவது, வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், […]
சுபமுகூர்த்த தினமான இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]

