ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திற்கு கிழக்கே சுமார் 17 மைல் தொலைவில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு முதல் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.. அதைத் தொடர்ந்து […]

தனது தாயார் ஹீராபென்னை அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாகக் கண்டித்தார். பிரதமர் மோடி உரையின் போது, ​​பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்ஹார்.. அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தூண்டி உள்ளது.. பிரதமர் மோடி என்ன சொன்னார்? பீகாரில் உள்ள மகா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது தனது […]

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் மாஸ்க் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, […]

ஏழை, எளிய மக்களுக்கு இந்திய அரசு, தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையங்கள் சிறிய தொகையில் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இவை அரசு உத்தரவாதம் பெற்றவை என்பதால், மக்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். அந்த வகையில், தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் 7.1% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து, […]

நெல்லை மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே உக்கிரமன்னன் கோட்டை பகுதியைச் சேர்ந்த 54 வயது மிலன்சிங் என்ற மாற்றுத்திறனாளி ஏற்கனவே 3 திருமணங்கள் செய்த நிலையில், அவர்களை பிரிந்து ஜீவிதா என்பவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், மலையன்குளத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுடன் மிலன்சிங்கிற்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் திடீரென மாயமானார். இந்நிலையில், அவரது பெற்றோர் குருவிகுளம் காவல் நிலையத்தில் தனது மகள் காணாமல் […]

கோவையைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது தாயை இழந்த பின் தந்தை மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்தார். தற்போது ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, பள்ளியில் கல்வி பயின்றுக் கொண்டிருந்த அந்த மாணவி, தனது அக்காவுடன் அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். […]

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், வாரணாசியில் 17 வயதான ஒரு சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 5 பேர் உடனடியாக கைது […]

வேத ஜோதிடத்தில், சுக்கிரன் அன்பு, அழகு, செல்வம், செல்வம் மற்றும் பொருள் இன்பங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி, மேலும் சுக்கிரனின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி, அதிகாலை 12:23 மணிக்கு, சுக்கிரன் மகர ராசியிலிருந்து வெளியேறி சூரியனின் ராசியான சிம்மத்தில் நுழைவார். இந்தப் பெயர்ச்சி அக்டோபர் 9 வரை இருக்கும், […]

ஒரு நபர் பிறக்கும் மாதத்தை வைத்தே அவர்களின் ஆளுமை, சிந்திக்கும் விதம், அவர்கள் எப்படி முடிவுகளை எடுக்கிறார்கள், மற்றவர்களுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை கணிக்க முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. சிலர் இயற்கையாகவே புத்திசாலிகளாகப் பிறக்கிறார்கள். இவர்கள் சூழ்நிலைகளை எளிதில் பகுப்பாய்வு செய்து உடனடியாக சரியான முடிவுகளை எடுக்க முடியும். அத்தகையவர்கள் பொதுவாக தந்திரமானவர்களாகவும், சில சமயங்களில் தந்திரமானவர்களாகவும் கூட கருதப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை எங்கே, எப்படிப் […]