அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.. திண்டுக்கலை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வானது உள்ளிட்டவற்றை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த தேர்வு முறை தவறானது என்றும், கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எடப்பாடி […]

திருப்பதியில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையில் “ திருப்பதி கோயிலில் சில இளைஞர்கள் ரீல்களுக்காக குறும்புத்தனமான செயல்களைச் செய்வது போன்ற வீடியோக்களை உருவாக்குவது, திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கவனத்திற்கு வந்துள்ளது. அவர்கள் கோவிலின் வளாகத்தில் நடனங்கள், ஆட்சேபனைக்குரிய போஸ் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளின் வீடியோக்களை உருவாக்கி, அவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் வெளியிடுகின்றனர். […]

அடுத்தடுத்து உயிரிழந்த அரசு பள்ளி மாணவர்களின் மர்ம மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி […]

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு அரிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகை உலகில் எங்கும் தெரியவில்லை. அந்தப் பெண் 38 வயதாக இருந்தபோது கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு O Rh+வகை ரத்தம் இருப்பது தெரியவந்தது… இது மிகவும் அரிதானது. O பாசிட்டிவ் ரத்த அலகுகள் எதுவும் அவருக்கு பொருந்தவில்லை. எனவே மருத்துவமனை ரோட்டரி பெங்களூரு […]