இந்திய திருமணமான 4 தம்பதிகளில் 1 தம்பதியினர் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாகவும், அவர்களது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான ஜோடிகள் ஒரே வீட்டில் வாழும்போது, அவர்களின் பழக்கவழக்கங்கள் ஒருவருக்கொருவர் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிகமாக உணவு அருந்துவது (binge eating), தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் தகவல்களை நெட்டில் பார்க்கும் பழக்கம் (doomscrolling), கடைசிநேரத்தில் பணிகளை பூர்த்தி […]

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற பத்து வயது சிறுமியை, வாயை மூடிக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, கடந்த சனிக்கிழமை அன்று, சாலையில் நடந்து சென்ற […]

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 19, 20 தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் ஜூலை 18, 19 தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, […]

குரூப் 2 தேர்வர்களுக்கு ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குரூப் 2 தேர்வில் பங்கேற்ற நபர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு […]

தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடத்தப்படும்.அதன்படி நடப்பாண்டு 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தமிழகத்தில் பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்கள் உதவியுடன் பயிற்சி பெறும் தனித் […]

வரி ஏமாற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட முக்கிய நடவடிக்கையின் ஒருப்பகுதியாக வருமான வரித்துறை ரூ.1,045 கோடி அளவிலான போலி வரித் திருப்பிச் செலுத்தல் கோரிக்கைகளை கண்டுபிடித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில், அறிமுகப்படுத்தப்பட்ட AI அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் வருமான வரி கணக்கில் (ITR) உள்ள தகவல்களில் முரண்பாடுகளை கண்டறிந்ததையடுத்து, 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர். வருமான வரி செலுத்துவோரில் சிலர், […]

ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி ஊரகப்பகுதிகளில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைளும் விளக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாக, கட்டிட அனுமதியை 3 வகைகளில் வழங்க வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுயசான்றின் அடிப்படையில் 2,500 […]

தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில், மலைமேல் எழுச்சியுடன் திகழும் முருகன் கோயில்கள், பக்தர்களின் நம்பிக்கையை ஊட்டும் தலமாக விளங்குகிறது. அதுபோல, நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில், சுமார் மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுத்து வரும் ஒரு மலைத் திருத்தலம் கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில். இந்த மலைக்கோயிலில் ‘அண்டி கோலத்தில்’ திகழும் முருகனை காணும் போது, திருவண்ணாமலை பழனி மலையை நேரில் சென்று தரிசித்த உணர்வு எழுகிறது. நுழைவாயிலை கடந்து […]

காமராஜர் பற்றிய அவதூறு தொடர்ந்தால், காங்கிரஸ் பதிலடி தரும் என்று ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் குறித்து திமுக எம்.பி திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும் அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அரசு பயணியர் விடுதியிலும் திமுக ஆட்சி காலத்தில் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கலைஞர் […]