முக்கியமான எட்டு தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2021 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் (தோராயமாக) 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உரங்கள், எஃகு, நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கடந்த ஆண்டு அக்டோபரை விட, இந்த ஆண்டு அக்டோபரில் அதிகரித்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய முக்கியமான எட்டு தொழில்துறைகளின் உற்பத்தியில் தனிப்பட்ட மற்றும் இணைந்த […]
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 82. புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான பீலேவுக்கு மருத்துவமனையில் கிமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு கிமோதெரப்பி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில்சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது, சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி […]
வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான கியாஸ் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டல், டீக்கடை […]
டிசம்பரில் வங்கிச் செயல்பாடுகளைக் கொண்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் விவரங்களை பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, 2022 டிசம்பரில் பல்வேறு மாநிலங்கள் மொத்தம் ஒன்பது நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஒன்பது விடுமுறை நாட்களைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில், பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய […]
எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு, டீசல் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யபடவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி. ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் காய்ச்சல், மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் என அவதிப்பட்டு வருகின்றனர். தொடரும் போது ஆரம்ப கட்டத்திலே வைத்தியத்தை செய்து கொண்டால் இதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.அதனை பற்றி இங்கே அறிவோம். நொச்சி இலையை சிறிது எடுத்து சுடுநீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை பிடித்து வர தலைபாரம் சற்று குணமாகும். எலுமிச்சை விதை, எலுமிச்சை தோல் மற்றும் எலுமிச்சை இலை எடுத்து […]
தற்சமயத்தில் பலருக்கு சிறு வயதிலேயே மறதி ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இதனை சரிசெய்ய உணவில் தனிப்பட்ட சிறப்பு கவனம் செலுத்தப்படுவது அவசியமாக உள்ளது. உடலுக்கு மட்டுமின்றி மூளைக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. நினைவாற்றலை அதிகரிப்பதற்காக சில உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் என்னென்ன உணவுகள் நினைவாற்றலை மேம்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட வாழ்வில் பச்சைக் காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் வளர்ச்சி […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாடு […]
வேர்க்கடலை என்றாலே விரும்பி உண்ணாதவர் என்று எவரும் இல்லை. இதில் ருசி மட்டும் இல்லாமல் ஏராளமான நன்மைகளும் நிறைந்துள்ளது. அதில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் அதனை எப்போதெல்லாம் உண்ணலாம் என்ற பதிவினை இங்கே காணலாம். வேர்க்கடலை பல்வேறு வகையில் உணவினில் சேர்த்து கொள்ளளாம். வறுத்தும் உண்ணலாம், பச்சையாகவும் சாப்பிடலாம், வேக வைத்தும் சாப்பிடலாம், பொரித்தும், சமைத்தும் சாப்பிடலாம். மேலும் , கடலை எண்ணெய் தயாரிக்கவும் வேர்க்கடலை பயன்படுகிறது. இதனை உண்ணும் போது […]