மாங்காடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 42 வயதான லட்சுமிபதி வேலைக்காக நடந்து சென்றபோது கால் தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், லட்சுமிபதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,016 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரவணன்(42 வயது) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவியும் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் , வழக்கம் போல் நேற்று காலை சரவணன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாணவிகளுக்கு கணித வகுப்பும் எடுத்து கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி வகுப்பிலேயே கீழே விழுந்தார். இதனை கண்டு அவருடன் பணிபுரிந்த சக […]

லேப்டாப் வைத்திருந்த பயணியிடம் அரசுப் பேருந்து நடத்துனர் கூடுதலாக ரூ.10 கட்டணம் சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபரான மயூர் பாடீல், கடக் பகுதியில் இருந்து ஹூப்ளிக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். இவர் தனது பயணத்தின் போது டிக்கெட் பெற்றுக் கொண்டு சென்ற நிலையில், தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு வந்த நடத்துனர் லேப்டாப்புக்கு […]

கோடக் மகேந்திரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 2ஆண்டு முன் அனுபவம் அவசியம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது […]

விஷ கசாயம் கலந்த ஜூஸ் கொடுத்து, காதலனை கொலை செய்த சம்பவத்தில் கைதான மாணவி, தனது காதலனை டேட்டிங் அழைத்துச்சென்று, ஜூஸில் காய்ச்சல் மாத்திரைகளை கலந்து கொடுத்து 10 முறைக்கு மேல் கொலை செய்ய முயன்றது அம்பலமாகி உள்ளது. தமிழக – கேரளா எல்லையான பாறசாலை பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவர் சரோன் ராஜை, வீட்டிற்கு அழைத்து கசாயத்திலும், ஜூஸிலும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக, காதலி கிரீஷ்மா […]

பழங்குடியின இளைஞரை காதலித்ததாக கூறி, பெற்ற மகளை தந்தையே ஆணவக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவை அதிரவைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சித்தம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி ஓம்கார கவுடா. இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவிக்கும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் அடிக்கடி […]

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய முறைப்படி பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், உயர்கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி […]

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நவ.1ஆம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கிடையே, ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் […]

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், ஒருவேளை மழைக் குறுக்கிட்டால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்று, சூப்பர் 12 சுற்றுகள் ஆகியவை மழையுடன் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், முதல் அரையிறுதிக்கு தேர்வான நியூசிலாந்து அணியை, பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து […]