”இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”இந்த கூட்டத்தின் நோக்கம் வரும் 4ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திருச்சியில் காகித தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பின்பு அரியலூர் மற்றும் […]

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் ஸ்வாதி ரயிலுக்காக காத்திருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் ஸ்வாதியை அரிவளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடினான். இந்த வழக்கில் கொலையாளியை பல நாட்கள் தேடி வந்த நிலையில் தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ராம்குமார்தான் ஸ்வாதியை கொலை செய்தார் என […]

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் மாநில முதலமைச்சருமான சரத் பவாருக்கு இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சரத் பவாரை தொடர்பு கொண்டு அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வருகிற நவம்பர் […]

குஜராத்தில் நடந்த பாலம் விபத்தில் ராஜ்காட் மக்களவை உறுப்பினர் மோகன்குந்தரியாவின் உறவினர்கள் 12 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்காட் மக்களவை பா.ஜ.க. உறுப்பினராக மோகன் குந்தரியா உள்ளார். இவரின் உறவினர்களும் நேற்று நடந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை மலை சுற்றிப் பார்க்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். உயிரிழந்த 12 பேரில் 5 குழந்தைகள், 4 பெண்கள், 3 ஆண்கள் ஆவர். […]

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் தேதி நிகழ இருக்கிறது. சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 25ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. ஒரு கிரகணகாலம் என்பது தோராயமாக 35 நாட்கள் ஆகும். இவற்றில் குறைந்தது 2 கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில் ஒரு கிரகண காலத்தில் 3 கிரகணங்களும் […]

’பாரதிகண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம் அடைந்ததால் சின்னத்திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல நடிகரான பரத்கல்யாண் ’பாரதி கண்ணம்மா ’ சீரியலில் நடித்து வருகின்றார். இவரது மனைவி பிரியதர்ஷினி இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். பேலியோ டயட் முறையை பின்பற்றியதால் சர்க்கரை நோய் ஏற்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 மாதம் கோமாவில் இருந்தார் எனவும் கூறப்படுகின்றது. […]

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், தளபதி 67 படம் தொடங்கும் முன்பே படம் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 […]

பல ஆண்களுடன் உறவு கொண்டு 11 குழந்தைகளை பெற்ற பின்னரும் இளம்பெண்ணுக்கு இன்னும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை இன்னும் அவரை விடவில்லை. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வசித்து வருபவர் பிஹாய். இவருக்கு வினோதமான ஆசை உள்ளது. பல ஆண்டுகளுடன் உறவு கொண்டு பல குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. இதுவரை 8 ஆண்டுகளுடன் உறவு கொண்டதன் மூலம் 11 குழந்தைகளை அவர் […]

தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக GISAID என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, அது உருமாற்றம் அடைந்து மக்களை பயமுறுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் புதிதாக XBB என்ற உருமாற்றம் அடைந்த […]

கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ள ராஜ்யோத்சவாவிற்கு கலை நிகழ்ச்சிக்காக பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சி ஒத்திகை பார்த்தபோது மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் சஞ்சய் கவுடா . நாளை நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிக்காக மாணவன் பகத் சிங் வேடத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகத்தில் நடிக்க தீவிரமாக ஒத்திகை […]