பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளியை கேரள காங்கிரஸ் கமிட்டி மற்றும் டிசிசி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாதங்களுக்கு காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கேரள காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் எம்எல்ஏ அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும், அவரை காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிகளில் இருந்து 6 மாத காலத்திற்கு கட்சி இடைநீக்கம் செய்கிறது. “குற்றச்சாட்டுகள் குறித்து […]
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801ஆம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் 3 தினங்களுக்கு பிறகு மருது சகோதரர்களின் உடல்கள் அவர்கள் கட்டிய காளையார்கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக […]
கேரள மாநிலத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், கேரள மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]
தன்னைக் கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் பொய்யான செய்தியை உருவாக்கியதாக காசியாபாதை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழன் அன்று உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஐந்து ஆண்களால் தான் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு மிருகத்தனமாக நடத்தப்பட்டதாக டெல்லி பெண்ணின் கூற்று “புனையப்பட்டது” என்று போலீசார் நிராகரித்துள்ளனர். மேலும் பெண்ணின் கூட்டாளிகளான ஆசாத், அப்சல், கௌரவ் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு […]
டி20 உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் போட்டி. இரு அணிகளும் உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை போட்டிகளில் மட்டுமே நேருக்கு […]
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு 2022 அக்னிவீர் வாயு அல்லாத பணியிடங்களுக்கு பணியாற்ற மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி குறித்த கூடுதல் விவரங்கள்… பதவியின் பெயர்: மத்திய அரசு துறையில் Agniveervayu Non-Combatant பதவிக்கு விண்ணப்பிக்கலாம் கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 25 தேர்வு செய்யும் முறை: உடல் திறன் சோதனை, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை, […]
தீபாவளிக்கு நாகர்கோவில் – பெங்களூரு, கொச்சுவேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூரு மற்றும் கொச்சுவேலி – தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூரு சிறப்பு ரயில் அக்டோபர் 25ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு காலை 09.20 மணிக்கு பெங்களூரு […]
நிர்வாண பூஜை தொடர்பாக இளம்பெண் ஒருவர், கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யபாபு (36) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூட நம்பிக்கைகளில் அதீத நம்பிக்கை கொண்ட சத்யபாபு குடும்பத்தினர், திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் அவர்களது வீட்டிற்கு […]
நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு-வடமேற்கு திசையில் 110 கிலோ […]
சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஒடிசா அரசு அக்டோபர் 25-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும்போது, அதனை முழு சூரிய கிரகணம் என அழைக்கின்றனர். வருகிற 25-ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் 8-ம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி […]