கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து கார் தீப்பற்றிய விபத்துக்குள்ளானதில் பலியானவரின் அடையாளத்தை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இன்று காலை கோவையில் கார் ஒன்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து திகு திகுவென எரிந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதற்கட்ட விசாரணையில் காருக்கான எரிபொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. வேகத்தடையில் கார் ஏறி […]

தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:நாளை ( 24.10.2022 ) திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி – திருவாரூர் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் : 06197 , திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் டெமு (DEMU) எக்ஸ்பிரஸ் காலை 08.10 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. […]

அக்டோபர் 25ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்துஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 25ம்தேதி சூரிய கிரகணம் நடைபெறுகின்றது. அதே நேரத்தில் தீபாவளிக்கு அடுத்த நாள் என்பதால் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. எனவே ஒடிசா மாநில அரசு பள்ளி , கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் , நீதிமன்றங்கள் , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்குபொதுவிடுமுறை அறிவித்துள்ளது.ஒடிசா மாநிலம் கோனார்க் என்ற பகுதியில் புகழ்பெற்ற சூரியன் கோயில் […]

ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று சிபெரியா நாட்டில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபெரியா நாட்டில் ரஷ்ய நாட்டின் போர் விமானம் விழுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. கீழே விழந்த அடுத்த நொடியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது இதனால் பெரும் பபரபரப்பு ஏற்பட்டது. சிபெரியாவில் இக்குட்ஸ்க் என்ற பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்து குழு உறுப்பினர்கள் உயிரிழந்ததாக […]

சென்னை ஜாபர்கான் பேட்டையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டபள்ளத்தில் தவறி விழுந்து படுகாயம்அடைந்து சிகிச்சை பெற்று வந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தங்கி புதியதலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் முத்துக்கிருஷ்ணன் .இளம் வயதான இவர் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ம் தேதி அவர் தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜாபர்கான்பேட்டையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. […]

டெல்லியில் பெண் ஒருவர் கடத்தி கூட்டுபலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அது ஒரு நாடகம் என உறுதியாகி உள்ளது. டெல்லியில் 36 வயதான பெண் உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்திற்கு சென்றபோதுஅவரை 5 நபர்கள் கடத்தி 2 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்டதாகவும், சாக்கு மூட்டையில் கட்டி காரிலிருந்து வீசப்பட்டதாகவும் தகவல் […]

பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். அதே சமயம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் நீண்ட காலத்திற்கு இருந்தால் , அது நீண்ட கால முதலீடாக மாறுகின்றது. பொதுவாக, பி.பி.எப். முற்றிலும் ஆபத்து இல்லாத முதலீட்டாகும். அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே என்பிஎஸ் என்னும் தேசிய ஓய்வூதிய திட்டம் 100 சதவீதம் ஆபத்து இல்லாதது அல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் […]

ஆசியாவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ளது. இதில் மிக முக்கியமான தகவல் என்ன என்றால் பட்டியலில் டெல்லி இல்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகவும் உள்ளது. ஆசிய அளவில் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் காற்று மாசு அதிக அளவில் இருக்கும். மாசு அளவு அபாயகரமான அளவு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் அடர்த்தியான புகை […]

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய டி.20 போட்டியில் 160 ரன்கள் எடுத்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் டி20 உலக கோப்பை சூப்பர் 12 வது சுற்று போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரில் புவனேஷ்வர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது . 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]

மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் சரவெடியை வெடிக்கவேண்டாம் என்று முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் .. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் திருநாள். சிறுவர்கள் , பெரியவர்கள் என புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள் . அதே நேரத்தில் , பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி உள்ள நிலம் , நீர் , காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு […]