தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற்று இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தற்போது பண்டிகை காலம் தொடங்கி உள்ள தமிழ்நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி பண்டிகை காலத்தில் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, […]
நாம் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணமாகாதபோது, அது வீக்கம் மற்றும் குமட்டல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான ஆரோக்கியம் முக்கியமானது, ஏனெனில் மருத்துவ நிபுணர்கள் சொல்வது போல், குடல் தான் இறுதியில் உங்கள் உடலும் மனமும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆணையிடுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர், செரிமானம் சரியாக நடக்காதபோது, ”அதிக வாயு, வீக்கம், அதிக அமிலத்தன்மை, அடிக்கடி தளர்வான அசைவுகள் அல்லது குடல் ஒழுங்கின்மை போன்ற தெளிவான […]
அமெரிக்க அதிபர் ஜோபைடன் பள்ளி மாணவி போல்இருக்கும் சிறுமியை இழுத்து தோளில் கைபோட்டு டேட்டிங் ஆலோசனை கூறியிருக்கின்றார். அமெரிக்காவின் அதிபரான ஜோபைடன் , ’’நீங்கள் 30 வயது ஆகும் வரை எதையும் சீரியதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என கூறுகின்றார். உடனே பின்னால் திரும்பி பார்க்கும் அந்த சிறுமி அசவுகரியமாக உணர்கின்றார். இதை வீடியோ எடுப்பவர்களை தடுக்கும் நோக்கத்தில் அவர் நடந்து கொண்டிருக்கின்றார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள […]
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஜோடோ யாத்திரை பயணத்தில் பாதுகாப்பாற்ற முறையில் ஜோடோ யாத்திரை சென்றதால் 4 பேரை மின்சாரம் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியினர் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தலைமை ஏற்று ராகுல்காந்தி நடத்தி வருகின்றார். இன்று ஜோடோ யாத்திரை தொடங்கிய போது சங்கனகல்லு என்ற கிராமத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தொண்டர்கள் […]
பிரபல இந்தி சீரியலான யே ரிஷிதா க்யா கேலத்தா –வில் நடித்த நடிகை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது. யே ரிஷிதா க்யா கேலத்தா என்ற பிரபலமான சீரியல் நீண்ட காலமாக வெற்றிகரமாக ஓடியது. இதில் நடிகையாக நடித்தவர்தான் வைஷாலி தாக்கர் . 2016ம் ஆண்டு ராஜன் ஷாஹி என்ற சீரியல் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். சஞ்சனா சிங் என்ற கதாபாத்திரத்தில் […]
நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக திரை உலகினர் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பூ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். குஷ்புவைப் போலவே இருப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தார். சூர்யா , விஷால், சிவகார்த்திகேயன் , உதயநிதி ஸ்டாலின் , ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கின்றார். 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா […]
அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதாக திமுகவில் பேசப்பட்டு வருதற்கு உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியிருக்காருன்னு தெரியுமா? ஆம், கடந்த சில நாட்களாகவே அவர் தனது திரைப்படம் சம்மந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு கட்சி சார்ந்த சில பொது நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அரசியல் வட்டாரங்கள் அவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் […]
ஒரு நாளில் ஒருமணி நேரத்தில் 4 பாலியல் சீண்டல் நடக்கும் நாட்டில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்ப கீழே இறங்க முயன்றபோது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில்தான் இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. பள்ளி முடிந்தபின்னர் வீட்டுக்கு செல்ல மாணவி ஒருவர் ஆட்டோவில் ஏறி உள்ளார்.அந்த ஆட்டோ ஓட்டுனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது. […]
ஆப்பிள் நிறுவனத்திற்கு சார்ஜர் இல்லாமல் செல்போன்கள் விநியோகித்ததற்காக 20 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனங்கள் அளிக்கும் செல்போன்களுக்கு மின்னேற்றிகளை கொடுப்பதில்லை. இதனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து செல்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு வகையான வருத்தம்தான். ஐபோன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தனித்துவ வசதிகளைக் கொண்டுள்ளது அதிகமான விலைக்கு விற்கப்படுவதால் பணக்காரர்கள் அல்லது அந்த அளவுக்கு பண வசதிகள் கொண்டவர்கள் மட்டுமே இதை வாங்க […]