வௌவால்கள் மூலம் பரவும் புதிய வகை ‘கோஸ்தா-2″வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனா வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் ஸ்தம்பிக்க வைத்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், புதிய வகை கொரோனா வைரஸை அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவினர் கண்டறிந்துள்ளனர். ரஷ்ய […]
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது சசிகலா நடத்திய மீட்டிங் ஒன்று அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சி தொடங்கப்பட்ட நாள் அக்டோபர் 17. இந்த வருடம் அதன் பொன்விழா தொடங்கும் வருடம். இதனை அதிமுகவினர் பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சார்ப்பில் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் இதனை மிகச் சிறப்பாக கொண்டாட சசிகலாவும் திட்டமிட்டுள்ளார். தை பிறந்தால் […]
இயக்குநர்கள் ராஜமௌலியும், மணிரத்தினமும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை என்றும், படைப்பாளிகளின் படைப்புகளை ரசிக்க வேண்டுமே தவிர, ரசிகர்கள் சண்டையிட்டு கொள்ளக் கூடாது என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் காவல்கிணறு சக்கரவர்த்தி திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பார்க்க நடிகர் சரத்குமார் வந்திருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ கதையை சிறப்பாக இயக்கி உள்ளார் மணிரத்தினம். ‘பாகுபலி’ சிறந்ததா, ‘பொன்னியின் செல்வன்’ சிறந்ததா என்கிற போட்டியே […]
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை ’இயன்’ புயல் கடுமையாக தாக்கியிருக்கிறது. கடந்த வெள்ளியன்று புயல் கரையை கடந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகவே இருந்திருக்கிறது. ஃப்ளோரிடாவில் ஏற்பட்ட இந்த ’இயன்’ புயல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனெனில், இயன் புயல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்ததால், ஃப்ளோரிடாவில் உள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளித்ததோடு, வாகனங்கள் பலவும் கடுமையான சேதத்தை சந்தித்திருந்தன. இதுபோக […]
இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி, கவுகாதியில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளது. இதில், முதல் டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் அபார பவுலிங் செய்து, தென் ஆப்பிரிக்கா அணியை […]
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது வீட்டின் முன் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா […]
தீபாவளி சீட்டு நடத்தியவர் குடும்பத்துடன் தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர், சேலம் மாநகர் குகை அருகே பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (72). இவரது மகன் ஆனந்த்பாபு (38). வெள்ளி மற்றும் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அப்பகுதியை சுற்றியுள்ள மக்களிடம் சிறுசேமிப்பு சீட்டும் நடத்தி வந்துள்ளார். வெள்ளி சீட்டு, தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு என […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,375 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் ‘கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் முதுகெலும்பு’ எனக் கூறிய மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளான இன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. […]
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் தொடங்கியதன் மூலம், நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி வழங்கப்படும் என்றும், 2024ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். தற்போது […]